யாப்பதிகாரம் | 411 | முத்துவீரியம் |
என்பது, நேரசை தனித்துநின்று நாள்
எனவும், நிரையசை தனித்து நின்று மலர்
எனவும், சீராகும்.
(வ-று.)
பாலொடு தேன்கலந் தற்றே
பனிமொழி
வாலெயி றூறிய நீர். (குறள்-1521)
நன்றறி வாரிற் கயவர்
திருவுடையர்
நெஞ்சத் தவல மிலர். (குறள்-1072) (8)
வெண்சீர் வெண்டளையும்
இயற்சீர் வெண்டளையும்
870. காய்முன் னேரே வெண்சீர்
வெண்டளை
மாமுன் னிரையும் விளமுன் னேரும்
இயற்சீர் வெண்டளை யென்மனார்
புலவர்.
என்பது, காய்முன் நேர்வருவது
வெண்சீர்வெண்டளை.
(வ-று.)
யாதானு நாடாமா லூராமா
லென்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு. (குறள்.
367)
மாமுன் னிரையும் விளமுன் னேரும்
இயற்சீர் வெண்டளை.
(வ-று.)
பாலொடு தேன்கலந் தற்றே
பனிமொழி
வாலெயி றூறிய நீர். (குறள்-1121) (9)
நேரொன்றாசிரியத் தளையும்
நிரையொன்றாசிரியத் தளையும்
871. மாமுன் னேர் நேரொன்றிய
வகவற்
றளையாம் விளமுன் னிரைநிரை
யொன்றிய
அகவற் றளையா மாயுங் காலே.
என்பது, மாமுன்நேர்வருவது
நேரொன்றிய அகவற்றளை.
(வ-று.)
போது சாந்தம் பொற்ப
வேந்தி
யாதி நாதற் சேர்வோர்
சோதி வானந் துன்னு வோரே.
விளமுன் னிரைவருவது நிரையொன்றிய
வகவற்றளை
|