யாப்பதிகாரம் | 413 | முத்துவீரியம் |
ஓரசைச்சீர்கள் தளை கொள்ளுமாறு
875. அகவற் சீரற் றாகுமோ
ரசைச்சீர்
என்பது, நாள்முன்னர்
நேரசைவரின், நேரொன்றிய அகவற்றளை, நிரையசைவரின்,
இயற்சீர்வெண்டளை, மலர்முன்னர் நிரையசைவரின்
நிரையொன்றிய அகவற்றளை,
நேரசைவரின் இயற்சீர் வெண்டளையாகும்.
(வ-று.) வந்துழிக் காண்க. (14)
குறளடி
876. இருசீ ரான்வரல் குறளடி யெனலே.
என்பது, அடிகள்தோறும் இரண்டு
சீராகவருவது குறளடியாகும்.
(வ-று.)
திரைத்த சாலிகை, நிரைத்த
போனிரந்,
திரைப்ப தேன்களே, விரைக்கொண்
மாலையாய். (15)
சிந்தடி
877. முச்சீ ரான்முடி வதுசிந் தடியே
என்பது, அடிகள்தோறும் மூன்று
சீராகவருவது சிந்தடியாகும்,
(வ-று.)
இருது வேற்றுமை யின்மையாற்
சுருதி மேற்றுறக் கத்தினோ
டரிது வேற்றுமை யாகவே
கருது வேற்றடக் கையினாய். (16)
அளவடி
878. நாற்சீ ரான்வரல் அளவடி யாகும்.
என்பது, அடிகடோறு
நான்குசீராகவருவது அளவடியாகும்.
(வ-று.)
உலகெ லாமுணர்ந் தோதற்
கரியவ
னிலவு லாவிய நீர்மலி வேணிய
|