பக்கம் எண் :
 
எழுத்ததிகாரம்43முத்துவீரியம்

இதுவுமது

152. உ, ஊ, விறுதிமுன், உ, ஊ, வரினே
    இருமையுங் கெடவூ வேற்கு மென்ப.

(இ-ள்.) உகர ஊகாரங்களை இறுதியாகிய மொழிக்கு முன், உகர ஊகாரங்களை
முதலாகிய சொல்வரின் நிலைமொழி யிறுதியும் வருமொழி முதலுங்கெட்டு ஊகாரம் வரும்.

(வ-று.) குரு + உபதேசம் = குரூபதேசம். சுயம்பூ + உபதேசம் = சுயம்பூபதேசம்
எனவரும். (38)

குணசந்தி

153. அ, ஆ, விறுதிமுன், இ, ஈ, வரினே
     இருமையுங் கெடவே யேற்கு மென்ப.

(இ-ள்.) அகர ஆகாரங்களை இறுதியாகிய மொழிக்கு முன், இகர ஈகாரங்களை
முதலாகிய சொல்வரின் நிலைமொழி யிறுதியும் வருமொழி முதலுங்கெட்டு ஏகாரம் வரும்.

(வ-று.) நர + இந்திரன் = நரேந்திரன். உமா + ஈசன் = உமேசன் எனவரும். (39)

இதுவுமது

154. அ, ஆ, விறுதிமுன் உ, ஊ, வரினே
     இருமையுங் கெடவோ வெய்து மென்ப.

(இ-ள்.) அகர ஆகாரங்களை இறுதியாகிய மொழிக்கு முன், உகர ஊகாரங்களை
முதலிலேயுடைய சொல்வரின் நிலைமொழி யிறுதியும் வருமொழி முதலுங்கெட்டு ஓகாரம்
வரும்.

(வ-று.) தாம + உதரன் = தாமோதரன். கங்கா + உற்பத்தி = கங்கோற்பத்தி எனவரும்.
(40)

விருத்தி சந்தி

155. அ, ஆ, விறுதிமுன் எ, ஐ, வரினே
     இருமையுங் கெடவை யெய்து மென்ப.

(இ-ள்.) அகர ஆகாரங்களை இறுதியாகிய மொழிக்கு முன், எகர ஐகாரங்களை
முதலிலேயுடைய சொல்வரின் நிலைமொழியிறுதியும் வருமொழி முதலுங்கெட்டு ஐகாரம்
வரும்.