பக்கம் எண் :
 
எழுத்ததிகாரம்44முத்துவீரியம்

(வ-று.) சிவ + ஐக்கியம், = சிவைக்கியம், மகா + ஐச்சுவரியம் = மகைச்சுவரியம்
எனவரும். (41)

இதுவுமது

156. அ, ஆ, விறுதிமுன், ஓ, ஒள வரினே
     இருமையுங் கெடவௌ வெய்து மென்ப.

(இ-ள்.) அகர ஆகாரங்களை இறுதியாகிய மொழிக்கு முன், ஓகார ஒளகாரங்களை
முதலிலேயுடைய சொல்வரின் நிலைமொழியிறுதியும் வருமொழி முதலுங்கெட்டு ஒளகாரம்
வரும்.

(வ-று) கலச + ஓதனம் = கலசௌதனம். மந்திரா + ஒளடதம் = மந்திரௌடதம்
எனவரும். (42)

157. இ, ஏ, முதற்கை யாமென மொழிப.

(இ-ள்.) மொழிமுதல் இகர ஏகாரங்கள் ஐகாரமாகும்.

(வ-று.) கிரியிலுள்ள=கைரிகம், வேரம்=வைரம். (43)

158. முதலில் உ, ஊ, ஓ, ஒளவா கும்மே

(இ-ள்.) மொழிமுதல், உகர ஊகார ஓகாரங்கள் ஒளகாரமாகும்.

(வ-று.) குருகுலத்தார்=கௌரவர்; சூரன்மகள்=சௌரி; சோமன் மகன்=சௌமியன். (44)

159. அகர முதன்மொழி ஆகார மாகும்.

(இ-ள்.) முதன்மொழி அகரம் ஆகாரமாகும்.

(வ-று.) சனகன்மகள்-சானகி எனவரும். (45)

மொழியியல் முற்றும்.

இயல் உ - க்குச் சூத்திரம் 161.