எழுத்ததிகாரம் | 45 | முத்துவீரியம் |
5. புணரியல்
புணர்ப்பு இன்னதென்பது
160. நிலைவரு மொழியொடு
நேர்வது புணர்ப்பே.
(இ-ள்.) நிலைமொழி
வருமொழியோ டொன்றுபட்டுப் புணருவது புணர்ச்சியாகு
மெனவறிக.
(வ-று.) விளகுறிது, ஒளிமணி,
கலைமதி, சிவகாமி, பாலாழி, மதகளிறு, புதுமதி
எனவரும். பிறவுமன்ன. (1)
அதன் வகை
161. அதுதான்,
இயல்பு விகார மெனவிரு
பாலன.
(இ-ள்.) அப்புணர்ச்சி
இயல்புப்புணர்ச்சி யெனவும், விகாரப்
புணர்ச்சியெனவு
மிருபகுதிய வாகுமென்க. (2)
இயல்பு இன்னதென்பது
162. விகார மனைத்து மேவல
தியல்பே.1
(இ-ள்.) மேல்வரும்
விகாரவகையெல்லாம் அடையாதது இயல்புப்
புணர்ச்சியாகும்.
(வ-று.) கால் + ஆழி =
காலாழி. (3)
விகாரம் இன்னது என்பது
163. ஆக்கந் திரிபழி
வாகும் விகாரம்.
(இ-ள்.) விகாரம்
தோன்றலும், திரிதலும், கெடுதலுமாம்.
(வ-று.) அவரைக்காய்,
பஃறலை, மரவேர். (4)
மரூஉவும் புணர்தற்குரியது
164. 2மருவின் றொகுதியு மயங்கியன் மொழியும்
உரியவை யுளவே
புணர்நிலைச் சுட்டே.
1. நன் - உயிரீற் - 3.
2. தொல் - எழுத்து - புணரி.
9.
|