பக்கம் எண் :
 
அணியதிகாரம்499முத்துவீரியம்

என்பது, எழுத்துக்கள், அடிகளின் சொற்கள், இடைவிட்டும், இடைவிடாமலும் மாறி,
வேறே யொருபொருள் வந்து தோன்றுவது மடக்கணியாம். (5)

மடக்கு வருதற்குரிய அடிகள்

1134. அதுதான்,
     ஓரடி முதலா நான்கடி காறுஞ்
     சேரு மென்மனார் தெளிந்திசி னோரே.

என்பது, அம்மடக்கு, ஓரடிமுதலாக நான்கடியளவு நடக்கும்.

(வ-று.)

துறைவா துறைவார் பொழிற்றுணைவர் நீங்க
உறைவார்க்கு முண்டாங்கொல் சேவல்-சிறைவாங்கிப்
பேடைக் குருகாரப் புல்லும் பிறங்கிருள்வாய்
வாடைக் குருகா மனம்.

முதலடி மடக்கு.

கனிவா யிவள்புலம்பக் காலைநீ நீங்கில்
இனியா ரினியா ரெமக்குப்-பனிநாள்
இருவராத் தாங்கு முயிரன்றி யெங்குண்
டொருவராத் தாங்கு முயிர்.

இரண்டாம் அடிமடக்கு.

தேங்கானன் முத்தலைக்குந் தில்லைப் பெருந்தகைக்கு
ஓங்காரத் துட்பொருளா மொண்சுடர்க்கு-நீங்கா
மருளா மருளா தரித்துரைக்கு மாற்றம்
பொருளாம் புனைமா லையாம்.

மூன்றாமடி மடக்கு.

இவளளவுந் தீயுமிழ்வ தென்கொலோ தோயுங்
கவள மதமான் கடத்திற்-றிவளு
மலையார் புனலருவி நீயணுகா நாளின்
மலையா மலையா நிலம்.

நான்காமடி மடக்கு. (6)

இரண்டடி மடக்கு

1135. அதன்வகை,
      எழுவா யடியிரண் டிடையீ ரடிமுதல்