பக்கம் எண் :
 
அணியதிகாரம்504முத்துவீரியம்

இதுவுமது

1139. முதலடி யிரண்டினு மூன்றினு முதலினும்
     இடையடி யிரண்டினு முதலினு மிறுதியும்
     இறுதி யிரண்டினு முதலொழித் தேனைய
     அடியினுங் கடையய லல்லன மூன்றினு
     மூன்றா மடியொழித் தேனைய மூன்றினும்
     இரண்டா மடியொழித் தேனைய வடியினும்
     எல்லா வடியினு மெய்து மென்ப.

என்பது, முதலடி யிரண்டினும், மூன்றாமடியினும் முதலடியினும்,
நடுவிரண்டடியினும், முதலடியினும், கடையினும் கடையடியிரண்டினும், முதலடி தவிர
மற்ற மூன்றடியினும், ஈற்றயலல்லன வாகிய மூன்றடியினும், மூன்றாமடி தவிர மற்றைய
மூன்றடியினும், இரண்டாமடி தவிர மற்றைய மூன்றடியினும், அடிகளெல்லாவற்றினும்
வரும்.

(வ-று.)

விரைமேவு மதமாய விடர்கூடு கடுநாக
விரைமேவு மதமாய விடர்கூடு கடுநாக
வரைமேவு நெறியூடு தனிவாரன் மலைநாட
நிரைமேவு வளைசோர விவளாவி நிலைசோரும்.

முதலிரண்டடி மடக்கு.

கடன்மேவு கழிகாதன் மிகநாளு மகிழ்வார்க
ளுடன்மேவு நிறைசோர மெலிவாட னுயிர்நோவு
கடன்மேவு கழிகாதன் மிகநாளு மகிழ்வார்க
ளுடன்மேவு பெடைகூடு மறுகாலு முரையாகொல்.

முதலடி மூன்றாமடி மடக்கு.

கருமாலை தொறுகாதல் கழியாது தொழுதாலும்
உருமாய மதனாக மடுமாறு புரிவார்முன்
உருமாய மதனாக மடுமாறு புரிவார்முன்
வருமாய வினைதீர வொருநாளு மருளார்கொல்.

இடையடி இரண்டு மடக்கு.

மறைநுவல் கங்கை தாங்கினார்
நிறைதவ மங்கை தாங்கினார்