அணியதிகாரம் | 514 | முத்துவீரியம் |
என்பது, குணமும், வினையும்,
பயனும் ஆகிய இவற்றில் ஒன்றேனும் பலவேனும்
பொருளொடு
பொருள் புணர்ந்துவமை தோன்றக் கூறுவது
உவமையணி.
(வ-று.)
பண்பு:
‘பவளத்தன்ன மேனி’. (குறுந்-1)
வினை:
அரிமாவன்ன வணங்குடைத் துப்பு.
(பட்டின-298)
பயன்: (3)
மாரியன்ன வண்கை. (புறம்-132)
விரியுவமை
1157. விழுமிய குணமுதல் விரிந்து வருவது
விரியா மென்மனார் மெய்யுணர்ந்
தோரே.
என்பது, குணமும், வினையும், பயனும்,
விரிந்து வருவது விரியுவமை.
(வ-று.)
பால்போலு மின்சொற்
பவளம்போற் செந்துவர்வாய்ச்
சேல்போற் பிறழுந் திருநெடுங்கண்-மேலாம்
புயல்போற் கொடைக்கைப் புனனாடன் கொல்லி
அயல்போலும் வாழ்வ தவர்.
(தண்டி-மேற்) (4)
தொகையுவமை
1158. அக்குண முதலிய வடங்கி வருவது
தொகையா மெனப்பெயர் சூட்டப்
படுமே.
என்பது, முற்கூறிய பண்பு முதலிய
மூன்றும் தொக்கு வருவது தொகையுவமை.
(வ-று.)
அன்னங் கண்படு தண்பணை நிடதநா
டளிக்கு
மன்னர் மன்னவன் மண்டமர்
கடந்தவொள் வேலின்
|