பக்கம் எண் :
 
அணியதிகாரம்514முத்துவீரியம்

என்பது, குணமும், வினையும், பயனும் ஆகிய இவற்றில் ஒன்றேனும் பலவேனும்
பொருளொடு பொருள் புணர்ந்துவமை தோன்றக் கூறுவது உவமையணி.

(வ-று.)

பண்பு:

‘பவளத்தன்ன மேனி’. (குறுந்-1)

வினை:

அரிமாவன்ன வணங்குடைத் துப்பு. (பட்டின-298)

பயன்: (3)

மாரியன்ன வண்கை. (புறம்-132)

விரியுவமை

1157. விழுமிய குணமுதல் விரிந்து வருவது
      விரியா மென்மனார் மெய்யுணர்ந் தோரே.

என்பது, குணமும், வினையும், பயனும், விரிந்து வருவது விரியுவமை.

(வ-று.)

பால்போலு மின்சொற் பவளம்போற் செந்துவர்வாய்ச்
சேல்போற் பிறழுந் திருநெடுங்கண்-மேலாம்
புயல்போற் கொடைக்கைப் புனனாடன் கொல்லி
அயல்போலும் வாழ்வ தவர். (தண்டி-மேற்) (4)

தொகையுவமை

1158. அக்குண முதலிய வடங்கி வருவது
     தொகையா மெனப்பெயர் சூட்டப் படுமே.

என்பது, முற்கூறிய பண்பு முதலிய மூன்றும் தொக்கு வருவது தொகையுவமை.

(வ-று.)

அன்னங் கண்படு தண்பணை நிடதநா டளிக்கு
மன்னர் மன்னவன் மண்டமர் கடந்தவொள் வேலின்