அணியதிகாரம் | 550 | முத்துவீரியம் |
புகழாப் புகழ்ச்சியணி
1253. பழிப்பது போலும்
பான்மையின் மேன்மை
புலப்படல் புகழாப் புகழ்ச்சி
யாகும்.
என்பது, பழிப்பதுபோலும்
பாகுபாட்டானொரு பொருளுக்கு மேம்பாடு தோன்றல்
புகழாப் புகழ்ச்சி.
(வ-று.)
போர்வேலின் வென்றதூஉம்
பல்புகழிற் போர்த்ததூஉம்
தார்மேவு திண்புயத்துத் தாங்கியதூஉம்-நீர்நாடன்
தேரடிக்கீழ்க் காப்பதூஉஞ் செங்கட் டிருநெடுமா
லோரடிக்கீழ் வைத்த வுலகு.
(தண்டி-மேற்) (100)
நிதரிசனவணி
1254. ஒருவகை யானொழு குவதொன்
றற்குப்
பொருந்தின வொருபயன் வேறொன்
றற்கு
நன்மை தீமைநாட் டுவதுநி தரிசனம்.
என்பது, ஒரு வகையானிகழ்வ
தொன்றனுக்குப் பொருந்திய வொருபயன்
வேறொன்றனுக்கும் நன்மையேனும் தீமையேனுந்
தரல் நிதரிசனம்.
(வ-று.)
பிறர்செல்வங் கண்டாற்
பெரியோர் மகிழ்வுஞ்
சிறியோர் பொறாத திறமு-மறிவுறீஇச்
செங்கமல மெய்மலர்ந்த தேங்குமுத மேயசைந்த
பொங்கொளியோன் வீறெய்தும்
போழ்து. (தண்டி-மேற்) (101)
புணர்நிலையணி
1255. விழுமிய வினையினும்
குணத்தினு
மிருபொருட்
கொருபுணர் புணர்ப்பது புணர்நிலை
யாகும்.
என்பது, வினையினானும்
பண்பினானும் இரண்டு பொருள்களுக்கு
ஒருபுணர்ச்சியைக்
கூறல் புணர்நிலையணி.
(வ-று.)
வேண்டுருவங் கொண்டு கருகி
வெளிபரந்து
நீண்ட முகிலுடனே நீர்பொழிந்த-வாண்டகையோன்
மேவல் விரும்பும் பெருநசையான் மெல்லாவி
காவல் புரிந்திருந்தோர் கண்.
(தண்டி-மேற்) (102)
|