பக்கம் எண் :
 
சுவாமிநாதம்119சொல்லதிகாரம்
 
ஏ, ஒ, மன்ற என்பன போன்று கீழே விளக்கும் இடைச்சொற்கள்
இவ்வகையைச் சார்ந்தவை.

      எழுத்தணவல் என்பது கரம், காரம் போன்ற எழுத்துச் சாரியைகளைக்
குறிப்பதாகக் கொள்ளலாம்.

     கடைசியில் வந்தது - அது மன்.

     இடைநிலையில் வருவது - கால இடைநிலை, சாரியை போன்றவை.
             செய்தான்<செய்-த்-ஆன்,
             மரத்தை < மரம்-அத்து-ஐ,

     இறுதியில் வருவது வேற்றுமை உருபு, விகுதி
          போன்றவை - தாளால்< தாள்-ஆல்;
              செய்தான்< செய்-த்-ஆன்.

     ஒன்று வருதல்-கையே : ஏகார மட்டும் ஒன்று வந்தது.
     பல வருதல்-சாரியையும் உருபும் சேர்ந்து வருதல் -
     காலினை< கால்-இன்-ஐ: இடைநிலை, சாரியை, விகுதி ஆகியவையும்
சேர்ந்து வரும். நடந்தனன்< நட-ந்த-அன்-அன். தில் என்ற இடைச்சொல்
‘தில்ல’ என்றும் வருவது ஈறு திரிந்து வருவதற்கு உதாரணமாகும்.

     ‘ஏ’ என்ற இடைச்சொல்லின் ஆறு பொருள்கள்:

1. எதிர்மறை: நண்பனே கொண்டான். இங்கு நண்பன் கொள்ளவில்லை என்ற
           பொருள் தருவதால் எதிர்மறை. 

2. தேற்றம் : உண்டே கடவுள். இங்கு உண்டு என்பது ஐயமில்லை என்னும்
           தெளிவுப் பொருளைத் தருவதால் தேற்றம்.

3. பிரிவு:   நூல்களுள் தொல்காப்பியமே சிறந்தது. இங்கு பல நூல்களுள்ளும்
          தொல்காப்பியத்தைப் பிரித்து நிற்றலால் பிரிவு.

4. எண்:    நாலேகால் (நாலும் காலும்)

5. வினா:   நீயே வந்தாய் இங்கு நீயா வந்தாய் என்று பொருள் தருவதால்
          வினா.