ஆகும். அலகு கீழ், நடு, மேல், அளவு என நால்வகைப்படும்; கூட்டு, குறிப்பு எழுத்துகள் இத்துணை என்று வரையறுத்துக் கூற முடியாதனவாகும் என்றவாறு. |
உயிர் முதலிய எழுத்துகள் எவையெவை என்பதை இலக்கண மரபாற் பெற்றாம். அலகெழுத்துகள் இத்துணை எனக் கூறாது நால்வகை எனக் கூறியது பின்னால் ஒவ்வோர் வகையிலும் பற்பல வரிவடிவங்கள் கூறப்படுதல் பற்றியாகும். |
அடுத்து எழுத்தெனப்படுவது வரிவடிவம், ஒலிவடிவம் ஆகிய இரண்டினையும் உடையது என்பது கூறப்படும். (4) |
5. | எழுத்தெனல் வடிவுடன் ஓசையும் உடைத்துஅவற்று | | உருஇயல்பு அனைத்தும் உணர்வார் சிற்சிலர்; | | ஒலிஇயல்பு உலகோர் உரைக்கும் மாற்றம்ஒவ் | | வொன்றிற் சிற்சில ஒளிர்தரும் அன்றே. |
|
எழுத்தெனப்படுவது தனக்கென ஒரு வரிவடிவத்தையும் ஓர் ஒலி வடிவத்தையும் உடையது; எழுதப்படிக்கத் தெரிந்தவர்களாகிய சிலர் வரி வடிவத்தை முற்றும் அறிவர். மக்களின் பேச்சுமொழி ஒவ்வொன்றிலும் சில எழுத்துகளின் ஒலி வடிவம் விளங்கும் என்றவாறு. |
மக்கள் தொகையில் சிறு பகுதியினரே கல்விக்கண் படைத்து எழுத்தின் வரி வடிவத்தை உணரும் திறமுடையராதல் பற்றிச் சிற்சிலர் என்றார். கல்லாமாக்களுக்கும் ஒலி வடிவம் புலப்படு மாதலின் அனைவரையும் உள்ளடக்கி உலகோர் என்றார். இஃது உயர்ந்தோர் மாட்டன்று. |
ஒவ்வொரு வார்த்தையிலும் அதன் பகுதியாகிய எழுத்துகள் மட்டும் ஒலித்தலினாலும், தமிழிற் பெரும்பாலும் ஐந்தெழுத்தின் மிக்குடைய தனிச் சொல் இன்மையானும் சிற்சில ஒளிர்தரும் என்றார். ஒவ்வொன்றில் என்புழி முற்றும்மை விகாரத்தாற் றொக்கது. |