| கருதிய தவமும், கருணையிற் சிறந்த |
| சுருதியிற்1 பழகிய தொண்டர்தம் துணைத்தாள் |
| மலர்தரு துகள்முதல் வயங்கும் மாண்பொருள் |
| சிலபெறும் தெளிவும், சீரிய புலவோர் |
| கவிக்கடல் அமுதுஉணும் களிப்பும், கதிர்முன் |
| குவித்தகை யுடன்தொழும் குழுவினர்2 உறவும் |
| புன்தலைச் சமணரைப் புலைத்தொழிற் புத்தரை |
| வென்றுஅகம் குளிர்சீர் விரும்பும் பகையும் |
| உறுவதால் திகழ்துணிவு ஒன்றால் |
| அறுவகை இலக்கணம் அறையலுற் றனமே. 4 |
|
தனதன தனத்தன தனதானா |
| 6. | முதிர்தமிழ் முனிக்கு3 ஒரு துணைபோல்வார் | | | முருகுஅவிழ் கடுக்கையன்4 உறவுஆவார் | | | விதிர்தரும் அயிற்5குகன் அருள்சேர்வார் | | | வினைஎனும் இருட்பிணி அறவாழ்வார் | | | கதிர்நடு விழுப்பொருள் அதைநேர்வார்6 | | | கலிமுழுது ஒழித்துஅகம் மகிழ்கூர்வார் | | | அதிர்தொனி அணிக்கவி தருசீர்ஆர் | | | அறுவகை இலக்கணம் அறிவாரே. (6) |
|
|