| கருதிய தவமும், கருணையிற் சிறந்த | 
| சுருதியிற்1 பழகிய தொண்டர்தம் துணைத்தாள் | 
| மலர்தரு துகள்முதல் வயங்கும் மாண்பொருள் | 
| சிலபெறும் தெளிவும், சீரிய புலவோர் | 
| கவிக்கடல் அமுதுஉணும் களிப்பும், கதிர்முன் | 
| குவித்தகை யுடன்தொழும் குழுவினர்2 உறவும் | 
| புன்தலைச் சமணரைப் புலைத்தொழிற் புத்தரை | 
| வென்றுஅகம் குளிர்சீர் விரும்பும் பகையும் | 
| உறுவதால் திகழ்துணிவு ஒன்றால் | 
| அறுவகை இலக்கணம் அறையலுற் றனமே. 4 | 
|  | 
		| தனதன தனத்தன தனதானா | 
| | 6. | முதிர்தமிழ் முனிக்கு3 ஒரு துணைபோல்வார் |  |  | முருகுஅவிழ் கடுக்கையன்4 உறவுஆவார் |  |  | விதிர்தரும் அயிற்5குகன் அருள்சேர்வார் |  |  | வினைஎனும் இருட்பிணி அறவாழ்வார் |  |  | கதிர்நடு விழுப்பொருள் அதைநேர்வார்6 |  |  | கலிமுழுது ஒழித்துஅகம் மகிழ்கூர்வார் |  |  | அதிர்தொனி அணிக்கவி தருசீர்ஆர் |  |  | அறுவகை இலக்கணம் அறிவாரே. (6) | 
 | 
|