தொகுத்துப் பதிகச்சதகம் எனவும் ஒரு நூல் இயற்றியுள்ளார். இத்தகைய நூல்களையும், அதன் பெயர்களையும் இந்நூற்பாவால் அமைத்துக் கொள்ளலாம். |
இந்நூலின் பொதுப்பாயிரத்தில் இவர் இதே கருத்தை, ‘கடலின் மீன்பெயர் நுளையர்வாய் மொழியெனல் கடுக்கும் ‘டம்நி லாவிய செழுந்தமிழ்ப் புலவர்” என வேறோர்உவமையால் விளக்கினார். (529) |
131. | ஒருபெயர்க்கு உரியார் உலகினில் பலரால்; | | பனுவலும் அங்ஙனம் பகர்வது முறையே. |
|
இவ்வுலகத்தில் ஒரே இயற்பெயரைப் பூண்டு பலர் விளங்குகின்றனர். இவ்வாறே ஒரே பெயரில் பல நூல்கள் தோன்றுவதில் தவறில்லை என்றவாறு. |
இச்சூத்திரத்தால் மாலை, அந்தாதி, பதிசம், சதகம், அலங்காரம், விலாசம், மஞ்சரி போன்ற பொதுப்பெயர்களில் பல வகையான வேறுபட்ட பிரபந்தங்கள் நிலவுதல் தழுவி ஏற்றுக் கொள்ளப்படுகிறது. (530) |
132. | மற்றையர்க்கு ஆகாப் பெயர்புனை மாந்தரில் | | சிற்சில பனுவல் திகழ்வவும் உளவே. |
|
தம்மைத் தவிர வேறு எவரும் வைத்துக்கொள்ளக் கூடாத சிறப்புப் பெயர்கள் சிலருக்கு இருக்கும். இலக்கியத்திலும் சில நூல்கள் இவ்வாறு மற்றவர்கள் ஆளக்கூடாத பெயர் பெற்று விளங்குகின்றன என்றவாறு. |
சேரமான், வழுதி, வளவன் போன்ற குடிப்பெயர்களும், கலைமாமணி போன்ற சிறப்புப்பெயர்களும் அவற்றை உடையவர்களுக்கன்றி மற்றவர்க்கு ஆகாப் பெயர்களாம். சில நூல்களுக்கும் இது பொருந்தும் என்கிறார். |
குறள் வெண்பாக்களால் ஆன நூல்கள் யாவும் திருக்குறள் ஆகமாட்டா. நான்கடிப் பாக்களாலானவை அனைத்தும் |