பக்கம் எண் :
 
அறுவகையிலக்கணம்005
நூலின் தன்மையும் செய்யுள் தொகையும்
4.தவராசர் புவிராசர் எனப்பெயர்மாத்
 திரம்புனைந்துஅத் தன்மை கொள்ளார்க்கு
 அவமானம் பெருக்கிஅந்தப் பெயர்க்குஉரிய
 குணம்கொள்வார்க்கு அழியாக் கீர்த்தி
 சிவலோகம் மட்டும்நிற்கச் செய்யவல்ல
 கவிராசர் செல்வம் ஆகும்
 நவநூல்1 ஒன்று எழுநூற்றுஎண் பத்துஆறு
 சூத்திரத்தால் நவின்றிட் டேனே.
(10)
நூலாசிரியர் தகுதி
5.எண்ணரிய கவிப்புலவர்க்கு இனியது ஆம்இவ்
 விலக்கணநூல் பகுப்புஆறும் இயம்பும் முன்னம்
 வண்ணம்முதல் பலபாடல் கடலில், ஆற்றில்,
 வாவியில் செந் தீயில்இட்டேன்;2 மற்றும் பன்னூல்
 விண்ணறிய மண்அறிய உலகத் தூடு
 விளங்கவைத்தேன் நலங்கருதி;3வேந்தர் போல்வார்
 தண்ணளிஇல் லாத்துறவோர் கெடுபாட் டுள்ளார்
 தன்மைஎல்லாம் அறிந்துஅறிந்தும் சலிப்புஉற் றேனே.
(11)