இலக்கண நூலில் இலக்கிய வரலாற்றுச் செய்திகள் இடம் பெற்ற காரணத்தை இந்நூற்பா விளக்குகிறது. அது முன்பே இவ்வியல்பின் முப்பதாம் சூத்திர உரையில் கூறப்பட்டது. மொழிப் புலமை சமுதாய வளர்ச்சிக்கோ அன்றித் தனிப்பட்டவர்களின் உயர்வுக்கோ சற்றும் பயன் தராது என்பவர்கள் இன்றும் உளர். அத்தகையோரைக் குறித்து எழுந்ததுவே இந் நூற்பா, | இச் சூத்திரத்தால் இவ் வியல்பு நிறைவேற்றப்பட்டு அடுத்த செயல்வகை இயல்பிற்குத் தோற்றுவாய் செய்து கொள்ளப்படுகிறது. (745) | |
|
|