| தொடுகடல் உடுத்த தொல்நில மகள்மலைப் |
| படுகலன் நாப்பண் பதித்தநன் மணியில் |
| பொலிதரு பல்வளப் புகலிமா நகர்வயின் |
| கலிமறை பயில்தரு கவுணியர் குலத்தில |
| நலன்உறத் தோன்றிய ஞானசம் பந்தன் |
| பலமுரண் மரீஇய பறிதலை அமணரைப் |
| போக்கிய ஞான்றில் புறநெறிக் கூற்றை |
| நீக்கி உய்வான் நிறுவிய முறையில் |
| திறம்பினர் தமையும் தெருட்டும் பொருட்டுஈண்டு |
| அறம்பிழை படாவிதத்து அறுவகை இலக்கணம் (10) |
| சிறக்க இயற்றுஎனச் செந்தில்எம் பெருமான் |
| திறத்தகை உலவாச் சிந்தையில் தெரிப்ப |
| மறக்கொணா அவன்இரு மலர்அடி வழுத்தித் |
| துறக்கொணா விதிகளைத் துகள்அறக் கூறித் |
| திருவுறு மாமலைச் சினகரத் தின்கண் |
| அருமைசால் புலவோர் அனைவரும் வியப்ப |
| உவமைஇல் பெரியோர் உளம்நனி உவப்ப |
| நுவலிய தமிழ்ப்புது நூல் அரங் கேற்றினன்; |
| திருவளர் பொதியைச் செழுந்தமிழ்த் தீஞ்சுவை |
| பெருகியது எனவரு பீடுஉறு பொருநையும் (20) |