பக்கம் எண் :
 
சாத்துகவிகள்542
பிற்சேர்க்கை-I
முதல் பதிப்பு, இரண்டாம் பதிப்பு இரண்டிலும் உள்ள சாத்துகவிகள்
(பதிப்பாசிரியர் குறிப்பு:- இப்பதிப்பின் பிற்சேர்க்கை I மற்றும் பிற்சேர்க்கை II-இல் உள்ள சாத்துகவிகள் அறுவகை இலக்கணத்தின் ஏட்டுச் சுவடியில் இல்லை. முற் பதிப்புகளின் அடிப்படையிலேயே இவை இங்குத் தரப்படுகின்றன.)
சோழவந்தானூர் அருளானந்த சுவாமிகள் ஆதீனம்
ஸ்ரீமத் கந்தசாமி சுவாமிகள்
அருளிச் செய்தன
நிலைமண்டில ஆசிரியப்பா
தொடுகடல் உடுத்த தொல்நில மகள்மலைப்
  படுகலன் நாப்பண் பதித்தநன் மணியில்
  பொலிதரு பல்வளப் புகலிமா நகர்வயின்
  கலிமறை பயில்தரு கவுணியர் குலத்தில
  நலன்உறத் தோன்றிய ஞானசம் பந்தன்
  பலமுரண் மரீஇய பறிதலை அமணரைப்
  போக்கிய ஞான்றில் புறநெறிக் கூற்றை
  நீக்கி உய்வான் நிறுவிய முறையில்
  திறம்பினர் தமையும் தெருட்டும் பொருட்டுஈண்டு
  அறம்பிழை படாவிதத்து அறுவகை இலக்கணம்
(10)
  சிறக்க இயற்றுஎனச் செந்தில்எம் பெருமான்
  திறத்தகை உலவாச் சிந்தையில் தெரிப்ப
  மறக்கொணா அவன்இரு மலர்அடி வழுத்தித்
  துறக்கொணா விதிகளைத் துகள்அறக் கூறித்
  திருவுறு மாமலைச் சினகரத் தின்கண்
  அருமைசால் புலவோர் அனைவரும் வியப்ப
  உவமைஇல் பெரியோர் உளம்நனி உவப்ப
  நுவலிய தமிழ்ப்புது நூல் அரங் கேற்றினன்;
  திருவளர் பொதியைச் செழுந்தமிழ்த் தீஞ்சுவை
  பெருகியது எனவரு பீடுஉறு பொருநையும்
(20)