பக்கம் எண் :
 

 உறுப்பியல் - தொடை ஓத்து                              181

43) பொழிப்புத் தொடை

     முதலொடு மூன்றாஞ் சீர்த்தொடை பொழிப்பே.

 என்பது என் நுதலிற்றோ?’ எனின், பொழிப்பு ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     இதன் பொழிப்பு : முதற்சீர்க்கண்ணும் மூன்றாஞ்சீர்க் கண்ணும் மோனை முதலாயின வரத் தொடுத்தால், பொழிப்புத்தொடை எனப்படும் (என்றவாறு).

     அவை பொழிப்பு மோனை, பொழிப்பு எதுகை, பொழிப்பு முரண், பொழிப்பு இயைபு, பொழிப்பு அளபெடை எனப்படும்

.

     ‘சீரிடை விட்டினி தியாப்பது பொழிப்பாம்.’

 எனவும்,

     ‘ஒருசீர் இடைவிடிற் பொழிப்பொரூஉ இருசீர்.’

 எனவும் பிறரும் சொன்னார் ஆகலின்.

 வரலாறு:

[நேரிசை ஆசிரியப்பா]

     ‘கணங்கொள் வண்டினம் கவர்வன மொய்ப்பக்
     கழிசேர் அடைகரைக் கதிர்வாய் திறந்த
     கண்போல் நெய்தல் கமழும் ஆங்கட்
     கலிமாப் பூண்ட கடுந்தேர்
     கவ்வைசெய் தன்றாற் கங்குல் வந்தே.’

 இது முதற்சீர்க்கண்ணும் மூன்றாஞ்சீர்க்கண்ணும் முதலெழுத்து ஒன்றி வந்தமையால், பொழிப்பு மோனை.

[நேரிசை ஆசிரியப்பா]

     ‘பல்கால் வந்து மெல்லக் கூறிச்
     சொல்லல் வளமையின் இல்லவை1 உணர்த்தும்2
     செல்புனல் உடுத்த5 பல்பூங் கழனி
     நல்வயல் ஊரன் வல்லன்
     ஒல்கா துணர்த்தும்ா பல்குறை மொழியே.’


  பி - ம். 1நல்லவை, 2எடுத்த. 5புணர்த்தும் 3ஒல்லானுணர்த்தும்.