பக்கம் எண் :
 

 உறுப்பியல் - தொடை ஓத்து                              189

     அவை வருமாறு

[நேரிசை ஆசிரியப்பா]

     ‘குழலிசைக் குரல தும்பி குறைத்த1
     குண்டுசுனைக் குற்ற மாயிதழ்க் குவளை
     குலைவேற்2 குறவன் பாசிலைக் குளவியொடு
     குறிநெறிக்5 குரல்வகுத் தடைச்சிய
     குறிஞ்சிசூழ் குவட்டிடைச் செய்தநம் குறியே.’

 இது மூன்றாஞ்சீர்க்கண் இன்றி ஒழிந்த மூன்று சீர்க்கண்ணும் முதலெழுத்து ஒன்றி வரத் தொடுத்தமையால், கீழ்க்கதுவாய் மோனை.

[நேரிசை வெண்பா]

     ‘அடும்பின் நெடுங்கொடி ஆழி எடுப்பக்
     கடுந்தேர் நெடும்பகற் றோன்றும் - கொடுங்குழாய்!
     பாடுவண் டாடும் பனிமலர் நீடுறை’
     நாடுவாம் கூடும் பொழுது’.

 இது மூன்றாஞ்சீர்க்கண் இன்றி, ஒழிந்த மூன்று சீர்க்கண்ணும் இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுத்தமையால், கீழ்க்கதுவாய் எதுகை.

[நேரிசை ஆசிரியப்பா]

     ‘விரிந்தும் சுருங்கியும் வில்லென ஒசிந்தும்
     குவிந்தும் மலர்ந்தும் குலையுறக் குலாவியும்
     பெருகியும் சிறுகியும் பின்னெறி நின்றும்3
     இருந்தோள் உண்கண் மலர்ந்தும்4
     பொருந்தா பொருந்திய புருவம்புடை பெயர்ந்தே’11

 எனவும்,

     ‘கருங்கண் வெள்வளை வார்குழைச் சேயிழை
     இரும்பும் பொன்னும் இயல்காழ் மணியும்’

 எனவும் இவை மூன்றாஞ்சீர்க்கண் இன்றி, ஒழிந்த மூன்று சீர்க்கண்ணும் மறுதலைப்படத் தொடுத்தமையால், கீழ்க்கதுவாய் முரண்.


  பி - ம் 1 குழலிசை குரற்றும்பி காணக் குறைத்த2 கொலைவேற்5 குறுநெறிக3 பின்னை நிமிர்ந்தும் இருந்து முண்கண் மலர்ந்தும் பொருந்தா4 பொருந்திய புருவம் புடைபெயர்ந் தனவே.