|
[தரவு கொச்சகம்]
‘அன்னையும் என்னையும் தன்னில் கடியும்
பன்னாளும் பாக்கமும் ஓவா தலர்தூற்றும்
பூக்கமழும் மெல்லம் புலம்பன் பிரியினும்
இன்னுயிர்யாம் இன்னும்இறந்தி ரேமுளேம்’1
இது மூன்றாஞ்சீர்க்கண் இன்றி, ஒழிந்த மூன்று சீர்க்கண்ணும் ஈற்றெழுத்து
ஒன்றி வரத் தொடுத்தமையால், கீழ்க்கதுவாய் இயைபு.
[நேரிசை ஆசிரியப்பா]
‘ஆஅம் பூஉ மணிமலர் தொடாஅ
யாஅம் தேஎம் தண்புனம் தழாஅம்
நாஅம் குறியிடை நண்ணும்
தேஎ மாஅம் பொருப்பிடை எனாஅ’.
இது மூன்றாஞ்சீர் இன்றி, ஒழிந்த மூன்று சீர்க்கண்ணும் அளபெடுத்தமையால்,
கீழ்க்கதுவாய் அளபெடை.
அஃதே எனின்,
‘ஈற்றயற் சீரொழித் தெல்லாம் தொடுப்பது
கீழ்க்கதுவாய் ஆகும்’.
என்றாலும், கருதிய பொருளைப் பயக்கும். ‘கிழமையதாகும்’ என்று மிகுத்துச்
சொல்ல வேண்டியது என்னை?’ [எனின்], கையனார் முதலாகிய ஒருசார்
ஆசிரியர் இரண்டாஞ் சீர்க்கண் இல்லாததனைக் ‘கீழ்க் கதுவாய்’ என்பது,
மூன்றாஞ்சீர்க்கண் இல்லாததனை ‘மேற்கதுவாய்’ என்றும் வழங் குவர்
என்பது அறிவித்தற்கு ஒரு தோற்றம் உணர்த்தியது எனக் கொள்க.
48) முற்றுத் தொடை
சீர்தொறும் தொடுப்பது முற்றெனப் படுமே
‘என்பது என் நுதலிற்றோ?’ எனின், முற்றுத் தொடை ஆமாறு உணர்த்துதல்
நுதலிற்று.
இதன் பொழிப்பு : நான்கு சீர்க்கண்ணும் மோனை முதலாயின வரத்
தொடுத்தவை முற்று மோனை, முற்று எதுகை, முற்று
பி - ம். 1 இன்னுமியாம் இன்னுயிரிறந்திரேமுளேம்.
|