பக்கம் எண் :
 

 192                                   யாப்பருங்கல விருத்தி

[நேரிசை ஆசிரியப்பா]

     ‘நெடுந்தோட் குறுந்தொடி வீங்குபிணி நெகிழ
     அரும்பொருள் எளிதெனச் சென்றவர் வருதல்
     சேய்த்தன் றணித்தெனத் தேற்றவும் தேறாய்
     அகஞ்சுடப் புறஞ்செவி நிறுத்தனை கிடத்தல்
     சின்மொழிப் பல்லிருங் கூந்தல்
     பெருந்தகு சீறடி நன்னுதல்! தீதே’

 இஃது எல்லாச் சீர்க்கண்ணும் மறுதலைப்படத் தொடுத்தமையால், முற்று முரண்.

[இன்னிசை வெண்பா]

     ‘கண்ணும் புருவமும் மென்றோளும் இம்மூன்றும்
     வள்ளிதழும் வில்லும் விறல்வேயும் வெல்கிற்கும்
     பல்லும் பகரும் மொழியும் இவையிரண்டும்
     முல்லையும் யாழும் இகும்.’

 இஃது எல்லாச் சீர்க்கண்ணும் ஈற்றெழுத்து ஒன்றி வந்தமையால், முற்று இயைபு.

[நேரிசை ஆசிரியப்பா]

     ‘குராஅம்? விராஅம் பராஅம்11 உராஅம்
     தொழாஅள் எழாஅள் விடாஅள் தொடாஅள்
     இதோஒ இதோஒ என்மகள்
     எலாஅ! எலா அ! யாங்குற் றனளே?’

 இது சீர்தோறும் அளபெடுத்தமையால் முற்று அளபெடை, பிறவும் அன்ன.

     ‘அவைதாம்,

     முதலோ டயல்கொள்வ திணை; அயல் இன்றி
     மூன்றாஞ் சீரது பொழிப்பிரண் டிடையிட்
     டிறுதியொடு கொள்வ தொருஉ; இறுதிச்
     சீரொழித் தேனைய தொன்றிற் கூழை;
     முதலீ றடைந்தவற் றின்மை இருவகைக்
     கதுவாய்; முற்றும் நிகழ்வது முற்றே;
     முதலொடெட் டாகும் என்மனார் புலவர்’.


  பி - ம். ? கராஅல் 11 மராஅம்.