பக்கம் எண் :
 

 உறுப்பியல் - தொடை ஓத்து                              197

 படும் என்று வேண்டினமையான், அதனாலும் தொடை கொள்ளப்படும்.

     இருபத்திரண்டு தொடையாவன:

[குறள் வெண்பா]

     ‘அடிமோனை ஏனைக் கிளைமோனை என்று
     முடியுமாம் மோனைப் பெயர்’

[மோனை, 2]

[நேரிசை வெண்பா]

     ‘இரண்டாம் எழுத்தொன்றல் மூன்றாவ தொன்றல்
     திரண்டமைந்த சீர்முழுதும் ஒன்றல் - முரண்டீர்
     கிளைவன்பால் மென்பால் இடைப்பால் உயிர்ப்பால்
     விளையும் எதுகையோர் எட்டு’.

[எதுகை 8]

     ‘மொழியும் மொழியும் பொருளும் பொருளும்
     மொழியும் பொருளும் மொழியோ - டழியாத
     சொல்லும் பொருளும் பொருளோடு சொற்பொருளும்
     சொல்லும் பொருளுமோர் ஐந்து’.

[முரண், 5]

     ‘பொழிப்பொரூஉச் செந்தொடை பொய்தீர் இரட்டை
     அழிப்பில் நிரனிறையோ டைந்தும் - எழுத்தல்
     குறிப்புத் தொடையியைபும்1 கொண்டுரைப்பார்க் கல்லால்
     நெறிப்படுமோ நூலின் நிலை?’?

[பிற தொடை, 7]

 ஐம்பத்தொரு நிலமாவன:

[நேரிசை வெண்பா]

     ‘வெள்ளை நிலம்பத் தகவல் பதினேழு
     துள்ளல் இருநான்கு தூங்கல்பத் - தெள்ளா
     இருசீர் அடிமுச்சீர் ஐந்தாறே ழெண்சீர்
     ஒருவா நிலமைம்பத் தொன்று’.

[நிலம், 51]


  பி - ம். 1 தொடையிவையும் ? தொன்னூல்நிலை