யாரஃ தறிந்திசி னோரே? சாரற் [ஒரூஉ எதுகை]
[இணை முரண்]
சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கிவள்
[கடை இணை எதுகை]
உயிர்தவச் சிறிது; காமமோ பெரிதே!’1 [பின் முரண்]
இதனுள் அடி எதுகையும், கூழை மோனையும், ஒரூஉ எதுகையும், இணை முரணும், கடையிணை எதுகையும், பின் முரணும் வந்தன வாயினும், முதல் வந்ததனாற் பெயர் கொடுத்து, அடி எதுகைச் செய்யுள் என்று வழங்கப்படும்.
[நேரிசை ஆசிரியப்பா]
[அடி ‘கடிமலர் புரையும் காமர் சேவடி [பொழிப்பு மோனை]
எதுகை] கொடிபுரை நுசுப்பிற் பணைத்தேந் திளமுலை
[அடி வளையொடு கெழீஇய வாங்கமை நெடுந்தோள்
[பொ. மோ.]
மோனை] வளர்மதி புரையும் திருநுதல் அரிவை
[அடி சேயரி நாட்டமும் அன்றிக்
முரண்] கருநெடுங் கூழையும் உடையவால் அணங்கே’.
இதனுள் எதுகையும், மோனையும், முரணும் முறையே வந்தன வாயினும், முதல் வந்ததனாற் பெயர் கொடுத்து, அடி எதுகைச் செய்யுள் என்று வழங்கப்படும்.
[நேரிசை ஆசிரியப்பா]
‘பரவை மாக்கடல் தொகுதிரை1 வரவும் [பொ. முரண்]
பண்டைச் செய்தி இன்றிவண1 வரவும [பொ. முரண்]
[அடி. மோ.] பகற்பின் முட்டா திரவினது வரவும் [பொ. முரண்]
பசியும் ஆர்கையும் வரவும்
பரியினும் போகா துவப்பினும் வருமே’.2
‘இதனுள் மோனையும், இயைபும், முரணும் வந்தன வாயினும், முதல் வந்ததனாற் பெயர் கொடுத்து அடிமோனைச் செய்யுள் என்று வழங்கப்படும் பிற’, எனின், அற்றன்று; முறையானே வேறு வேறு தொடைகள் பெற்று வாராது, பலவாய் வந்து, இறுவாய் ஒத்தமையின், மயக்கு இயைபு எனக் கொள்க.
1 குறுந். 18, யா. வி. 74 உரைமேற். 2-3 யா. வி. 40 உரைமேற்.
பி - ம். 1 படுதிரை 2செய்தியினின்றிவள்
|