உறுப்பியல் - தொடை ஓத்து 213 |
மற்றை அடியுள் முதற்கட் குற்றெழுத்து வல்லொற்றடுத்து வந்தால், அதனை விட்டிசை வல்லொற்றெதுகை என்று வழங்குவர் ஒருசார் ஆசிரியர் என்பதூ உம்; செய்யுள் ஈற்றடி இறுதி எழுத்தொன்றும் இரண்டும் மிகினும் இழுக்காது என்பதூஉம்; இரட்டைத் தொடை இறுதிக்கண் ஓரெழுத்துக் குறையினும் இழுக்காது என்பதூஉம்; செய்யுளந்தாதி தொடுக்கின் ஈற்றெழுத்தானும் சொல்லானும் இடையிட்டேறத் தொடுப்பினும் இழுக்காது என்பதூஉம்; அவற்றின் வழியெதுகை முதலிய வந்து முன் சொல்லப்பட்ட தொடையும் தொடை விகற்பமும் போலாமைத் தொடுத்து வருவனவற்றைச் செந்தொடை மருள் என்றும் மருட்செந்தொடை என்றும் வேண்டுவர் ஒருசார் ஆசிரியர என்பதூஉம்; மகார வகாரங்கள் அருகி எதுகையாய் வரினும் இழுக்காது என்பதூஉம் அறிவித்தற்கு வேண்டப்பட்டது.
‘விதப்புக் கிளவி வேண்டியது விளைக்கும்’.
ஆகலின்.
அவற்றிற்குச் செய்யுள் வருமாறு:
[நேரிசை ஆசிரியப்பா]
‘சிலம்படி மாதர் நன்னலம் குறித்துச்
சிலம்பதர் நள்ளென் கங்குற்
சிலம்பநீ வருதல் தகுவதோ அன்றே’.
இஃது இன எழுத்தும் விகற்பமும் வரத் தொடுத்ததின்மையால், செம்மோனை.
[குறள் வெண்பா]
‘கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன் றுள்ளக் கெடும்.’1
எனவும்,
[கலி விருத்தம்]
‘வண்டு படக்குவ ளைப்பிணை நக்கலர்
விண்ட நறப்பரு கிக்களி யின்மதர்
கொண்டு நடைக்களி அன்னம் இரைப்பதொர்
மண்டு புனற்புரி சைப்பதி சார்ந்தார்’.2
1 குறள் 109. 2. சூளா. சீய. 85
|