எனவும் இவை இனம் முதலாயின வரத் தொடுத்திலாமையின், செவ்வெதுகை.
[நேரிசை ஆசிரியப்பா]
‘கருங்கடல் உடுத்த மல்லல் ஞாலத்துச்
செம்மையின் வழாஅது கொடைக்கடம் பூண்டு
வாழ்வது பொருந்தா தாகிற்
சாவதும் இனிதவர் வீவதும் உறுமே’.
இது செம்முரண்.
[நேரிசை ஆசிரியப்பா]
‘துப்புறழ் செவ்வாய்க் கிளவியும் அணங்கே;
கருங்கண் வெம்முலைத் தொய்யிலும் அணங்கே;
வாணுதற் றிலகமும் அணங்கே;
சிலம்படி மாதர் நாட்டமும் அணங்கே’.
இதில் இனம் முதலாயின வரத் தொடுத்திலாமையான் செவ்வியைபு.
[குறள் வெண்பா]
‘தாஅ மரைமேல் உறையும் திருமகள்
போஒலும் மாதர் இவள்’.
இது செவ்வளபெடை.
‘நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத் தவலம் இலர்’.1
எனவும்,
‘கொல்லா நலத்தது நோன்மை; பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு’.2
எனவும் இவற்றுள் முதலது வருக்க மோனைக்கும் மெல்லின எதுகைக்கும் ஒத்து வந்ததாயினும்; இரண்டாவது எதுகைக்கும் இன மோனைக்கும் ஒத்து வந்ததாயினும், எதுகை என்று வழங்கப்படாது, கடையாகு மோனை என்று வழங்கப்படும். பிறவும் அன்ன.
[குறள் வெண்பா]
‘சொல்லுப சொல்லப் பொறுப்பவே1; யாதொன்றும்
சொல்லாத? சொல்லப் பொறா’ 5
1 குறள் 1072 2 குறள் 984, யா. வி. 57 உரைமேற்.
பி - ம். 1 பெறுபவே 2 சொல்லாது 5 பெறா.
|