பக்கம் எண் :
 

 உறுப்பியல் - தொடை ஓத்து                              217

     இறுதி குறைந்து வரும் ஒரு பொருள் இரட்டையைக் ‘குறை யீற்று ஒரு
 பொருள் இரட்டை’ என்றும், இறுதி குறைந்த பல பொருள் இரட்டையைக்
 குறையீற்றுப் பல பொருள் இரட்டை’ என்றும், குறையாததனை ‘நிறையீற்றுப்
 பல பொருள் இரட்டை’ என்றும் பெயரிட்டு வழங்குவாரும் உளர் எனக்
 கொள்க. குறையீற்றுப் பல பொருள் இரட்டையும், நிறையீற்றுப் பல பொருள்
 இரட்டையும் வந்த வழிக் கண்டு கொள்க.

     இறுதி எழுத்தும் சொல்லும் இடையிட்டுத் தொடுத்த செய்யுளந்தாதி,
 உதயணன் கதையும், கலியாண கதையும், பன்மணி மாலையும் மும்மணிக்
 கோவையும்1 என்றிவற்றுட் கண்டு கொள்க.

[குறள் வெண்பா]

     ‘அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
     சிறுகை அளாவிய கூழ்’.2

 என்பது இனவெழுத்துப் பெற்று1 முன் சொல்லப்பட்ட தொடையும் தொடை
 விகற்பமும் போலாமைத் தொடுத்தமையின், செந்தொடை மருள் எனக்
 கொள்க.

[நேரிசை ஆசிரியப்பா]

     ‘தொடிநெகிழ்ந் தனவே கண்பசந் தனவே                 [பொ. இ]
     யான்சென் றுரைப்பின் மானமின் றெவனோ
     சொல்லாய் வாழி தோழி! வரைய                   [இ. பு. எதுகை]
     முள்ளில் பொதுளிய பல்குரல் நெடுவெதிர்
     பொங்குவரல் இளமழை துவைப்ப
     மணிநிலா விரியும் குன்றுகிழ வோற்கே’.3

 இது பொழிப்பு இயைபும், இடைப்புணர் எதுகையும் வந்து இனமின்றித்
 தொடுத்தமையாற் செந்தொடை மருள் என்றும், மருட்செந்தொடை என்றும்
 வழங்கப்படும். இதனைச் செந்தொடையே என்று வழங்கினார் செய்யுளியல்
 உடையார் எனக் கொள்க.

     ‘தாமரை புரையும் காமர் சேவடி’4

 என்னும் பாட்டினுள் ஈற்றடி இரண்டும் மகார வகாரங்கள் எதுகையாய்
 வந்தன.


  1 யா. வி. 52 உரையை நோக்குக. 2 குறள் 64. யா. வி. 59 உரைமேற் 3
 யா. வி. 95 உரைமேற். 4 குறுந். கட. வாழ்த்து.

  பி - ம்.1இனவெழுத்துமுதலாயினபெற்று