பக்கம் எண் :
 

 218                                   யாப்பருங்கல விருத்தி

[கலி விருத்தம்]

     ‘அமரீர்! அசுரீர்! அழனா கரையீர்!
     எமரீர்! பிறரீர்! எறிவேல் ஒருவன்
     தமரீர்! பகவீர்!1 தகவோ தகவென்
     றவரூர் திரைபாய்ந் துரையா தொழிதல்?’

 இதுவும் அது. இதனை மூன்றாம் எழுத்தொன்று எதுகை என்பாரும் உளர்.

    இனவெழுத்து ஆமாறு சொல்லுதும்.

     அகரமும், ஆகாரமும், ஐகாரமும், ஒளகாரமும் தம்முள் இனமாம்.
     இகரமும், ஈகாரமும், எகரமும், ஏகாரமும், தம்முள் இனமாம?
     உகரமும், ஊகாரமும், ஒகரமும், ஓகாரமும் தம்முள் இனமாம்.

 இவ்வாறே இவ்வுயிர்மெய்க்கும் ஒட்டிக் கொள்க. ஒற்றுக்களுள்,

     சகர தகரங்களும் தம்முள் இனமாம்.
     ஞகர நகரங்களும் தம்முள் இனமாம்.
     வகர மகரங்களும் தம்முள் இனமாம்.

 இவற்றை ‘அனு’ என்று வழங்குவாரும் உளர். இவற்றுக்குச் செய்யுள் வந்த
 வழிக் கண்டு கொள்க.

[நேரிசை வெண்பா]

     ‘அகரமோ டாகாரம் ஐகாரம் ஒளகான்
     இகரமோ டீகாரம் எஏ-உகரமோ
     டூகாரம் ஒஓ ஞநமவ தச்சகரம்
     ஆகாத அல்ல அனு’.

 இதனை விரித்து உரைத்துக் கொள்க.

     ‘அஆ ஐஒள என்றிவை எனாஅ
     இஈ எஏ என்றிவை எனாஅ
     உஊ ஒஓ என்றிவை எனாஅத்
     தசமவ ஞநவெனும் என்றிவை எனாஅ
     முந்நா லுயிரும் மூவிரு மெய்யும்
     தம்முள் மயங்கினும் தவறின் றென்ப’.

 என்றிவை இனம் ஆமாறு எடுத்து ஓதினார் நல்லாறனார் எனக் கொள்க.


  பி - ம். 1அயலீர் ? இகர ஈகார எகர ஏகாரங்களும் ‘யா’ என்பதும்
 தம்முள் இனமாம்.