|
ஐகாரம், இகரத்தோடு அளபெடுக்கும். ஒளகாரம், உகரத்தோடு அளபெடுக்கும். என்னை?
‘குன்றிசை மொழிவயின் நின்றிசை நிறைக்கும்
நெட்டெழுத் திம்பர் ஒத்தகுற் றெழுத்தே.’1
‘ஐஒள என்னும் ஆயீ ரெழுத்திற்கு இகர உகரம் இசைநிறை வாகும்.’2
என்றார் தொல்காப்பியனார் ஆகலின்.
அவ்வளபெடைதான் நான்கு வகைப்படும்: தனிநிலை அளபெடையும்,
முதல்நிலை அளபெடையும், இடைநிலை அளபெடையும், இறுதிநிலை
அளபெடையும் என. என்னை?
‘தனிநிலை முதனிலை இடைநிலை ஈறென நால்வகைப் படூஉமள பாய்வரும் இடனே.’
என்றார் ஆகலின். அவை வருமாறு:
(1) ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ, ஐஇ, ஓஒ, ஒளஉ - என நெட்டெழுத்து
ஏழும் தனிநிலை அளபெடையாய் வந்தவாறு.
(2) பாஅரி, கீஇரை, கூஉரை, ஏஎரி, தைஇயல், ஓஒரி, ஒளஉவை
என ஏழு நெட்டெழுத்தும் முதல்நிலை அளபெடையாய் வந்தவாறு.
(3) படாஅகை, பரீஇகம், கழூஉமணி, பரேஎரம்,
வளைஇகம், புரோஒசை,
மனௌஉகம் - என ஏழு நெட்டெழுத்தும் இடைநிலை அளபெடையாய்
வந்தவாறு.
(4) படாஅ, குரீஇ, கழூஉ, விலேஎ, விரைஇ, நிலோஒ, அனௌஉ - என
ஏழு நெட்டெழுத்தும் இறுதிநிலை அளபெடையாய் வந்தவாறு.
ஒற்றளபெடை போக்கித் ‘தனிநிலை ஒற்றிவை தாமலகிலவே’3 என்னும்
சூத்திரத்துட் காட்டுதும்.
1தொல். எழுத்து. சூ. 41, 2தொல். எழுத்து. சூ. 42., 3. யா. வி. சூ.3.
குறிப்பு: பாஅரி - ஒரு வள்ளல், ஓஒரி - ஒரு வள்ளல், படாஅகை -
கொடி, பரீஇகம் - மதில், கழூஉமணி - கடைந்து சுத்தஞ்செய்த இரத்தினம்,
பரேஎரம் - மிக்க அழகு, வளைஇகம் - சூழ்வோம், புரோஒசை - யானைக்
கழுத்திடு கயிறு, மனௌஉகம் - (மன+ஓகம்) உள்ளக்கிளர்ச்சி, படாஅ
- குட்டிப்பிடவம், குரீஇ - குருவி, கழூஉ - கழுமரம், விலேஎ - வில்லம்பு,
விரைஇ, வாசனை, நிலோஒ - நிலாஅனௌஉ - இரக்கக்குறிப்புபோலும்,
அவ்வே - அவையே.
|