பக்கம் எண் :
 

 220                                   யாப்பருங்கல விருத்தி

          நாத என்று நின்று தாழ
     அங்க புவ்வம1 ஆதி யாய ஆதி நூலின்
          நீதி யோடும்? ஆதி யாய
     செங்கண் மாலைக் காலை மாலை சேர்வர்? சேர்வர்
          சோதி சேர்ந்த சித்தி தானே.1

 எனவும்,

[கட்டளைக் கலித் துறை]

     ‘மண்டலம் பண்டுண்ட திண்டோள் வரகுணன்
                                   தொண்டியின்வாய்க்
     கண்டலம் தண்டுறைக் கண்டதொன் றுண்டு கனமகரக்
     குண்டலம் கெண்டையி ரண்டொடு தொண்டையும்
                                   கொண்டொர் திங்கள்
     மண்டலம் வண்டலம் பக்கொண்டல் தாழ வருகின்றதே’

 எனவும் கண்டுகொள்க.

     ‘அனுப்பிராசம்’ என்னும் வடமொழியை ‘அனு’ என்பதும், ‘வழி எதுகை’
 என்பதும் தமிழ் வழக்கெனக் கொள்க.

     வழி முரணுவனவற்றை ‘முரண்’ என்று வழங்குவர் ஒருசார் ஆசிரியர்.

 வரலாறு:

[அறுசீர் ஆசிரிய விருத்தம்]

     ‘செய்யவாய்ப் பசும்பொன் ஓலைச் சீறடிப் பரவை அல்குல்
     ஐயநுண் மருங்குல் நோவ அடிக்கொண்ட குவவுக் கொங்கை
     வெய்யவாய்த் தண்ணேர் நீலம் விரிந்தென விலங்கி நீண்ட
     மையவாம் மழைக்கண் கூந்தல் மகளிரை வருக என்றான்’.2

 எனவும்,

[கட்டளைக் கலித்துறை]

     ‘ஒருமால் வரைநின் றிருசுடர் ஓட்டிமுந் நீர்க்கிடந்த
     பெருமா நிலனும் சிறுவிலைத் தாவுண்டு பேதையர்கண்
     பொருமா தவித்தொங்கல் எங்கோன் பொரவல் லவன்பொதியிற்
     கருமா விழிவெண்பல்4 செவ்வாய்ப் பசும்பொற் கனங்குழைக்கே’.

 எனவும் கொள்க.


  1 யா. வி. 53 உரைமேற். 2 சூளா. சீய. 101.