பக்கம் எண் :
 

 செய்யுள் இயல்                                         225

     இலங்கும் எறிபடையும் ஆற்றலும் அன்பும்1
     கலந்ததம் கல்வியும் தோற்றமும் ஏனைப்
     பொலஞ்செய் புனைகலனோ டிவ்வாற னாலும்
     விலங்கிவருங் கூற்றை விலக்கலும் ஆகா
     தனைத்தாதல் நீயிரும் காண்டிர் - நினைத்தகக்
     கூறிய வெம்மொழி பிழையாது;
     தேறிநீர் ஒழுகிற் சென்றுபயன் தருமே’.

 இது மெய்ப்பொருள் சொன்னமையான், வாயுறை வாழ்த்து மருட்பா.
 என்னை?

     ‘வாயுறை வாழ்த்தே வயங்க நாடின்,
     வேம்பும் கடுவும்? போல5 வெஞ்சொல்
     தாங்குதல் இன்றி வழிநனி பயக்குமென்
     றோம்படைக் கிளவியின் வாயுறுத் தன்றே’.1

 என்றாராகலின்.

[மருட்பா]

     ‘பல்யானை மன்னர் முருங்க அமருழந்து
     கொல்யானை தேரோடு கோட்டத்து - நல்ல
     தலையாலங் கானம் பொலியத் - தொலையாப்
     படுகளம் பாடுபுக் காற்றிப் பகைஞர்
     அடுகளம் வேட்டோன் மருக! - அடுதிறல்
     ஆளி நிமிர்தோள் பெருவழுதி! எஞ்ஞான்றும்
     ஈரம் உடையையாய் என்வாய்ச்சொற் கேட்டி:
     உடைய உழவரை நெஞ்சனுங்கக் கொண்டு
     வருங்கால் உழவர்க்கு வேளாண்மை செய்யல்;
     மழவர் இழைக்கும் வரைகாண் நிதியீட்டம்3
     காட்டும் அமைச்சரை ஆற்றத் தெளியல்;
     அடைத்த4 அரும்பொருள் ஆறன்றி வௌவல்;
     ஈகைப11 பெரும்பொருள் ஆசையாற் சென்று
     பெருங்குழிசி, மன்ற மறுக அகழாதி; என்றும்
     மறப்புற மாக மதுரையார் ஓம்பும்
     அறப்புறம் ஆசைப் படேற்க - அறத்தால்? ?


  1 தொல். பொ. 424.

  பி - ம். 1 மாண்பும் ? கரும்பும் 5 போல்வன 3 ஆமி 4 வரைக்கா
 னிதியீட்டம11 படைத்த ? ? இனத்தைப்