பக்கம் எண் :
 

 280                                   யாப்பருங்கல விருத்தி

[நேரிசை ஆசிரியப்பா]

     ‘போது சாந்தம் பொற்ப ஏந்தி
     ஆதி நாதற் சேர்வோர்
     சோதி வானம் துன்னுவோரே’.

 என்பது ஏந்திசை அகவல் ஓசை.

[நேரிசை ஆசிரியப்பா]

     ‘அணிநிழல் அசோகமர்ந் தருள்நெறி நடாத்திய
     மணிதிகழ் அவிரொளி வரதனைப்
     பணிபவர் பவநனி பரிசறுப் பவரே’.

 என்பது தூங்கிசை அகவல் ஓசை.

[நேரிசை ஆசிரியப்பா]

     ‘குன்றக் குறவன் காதல் மடமகள்
     வரையர மகளிர் புரையும் சாயலள்
     ஐயள் அரும்பிய முலையள்
     செய்ய வாயினள் மார்பினள் கணங்கே’.

 என்பது ஒழுகிசை அகவல் ஓசை.

 இன்னும் பிறவாற்றான் வருவன.

[நேரிசை ஆசிரியப்பா]

     ‘கொன்னூர் துஞ்சினும் யாம்துஞ் சலமே;
     எம்மில் அயல தேழில் உம்பர்
     மயிலடி இலைய மாக்குரல் நொச்சி
     அணிமிகு மென்கொம் பூழ்த்த
     மணிமருள் பூவின் பாடுநனி கேட்டே’. 11

 இன்னவை பிறவும் தூங்கிசை அகவல் ஓசை எனப்படும்.

[நிலைமண்டில ஆசிரியப்பா]

     ‘பொழிலே
     இரவோ ரன்ன இருளிற் றாகியும்,
     நிலவோ ரன்ன வெண்மணல் ஒழுகியும்,
     அரைசுமணம் நயந்த பந்தர்ப் போலவும்,


  1 குறுந். 138                              பி - ம். 1 ஓர்ந்தே