இது முதல் அயலடி ஒரு சீர் குறைந்து, ஏனை மூன்றும் நாற்சீர்
அடியாய், இடை மடக்காய் வந்த ஆசிரிய நேர்த்துறை.
[ஆசிரிய இணைக்குறட்டுறை]
‘பாடகஞ்சேர் காலொருபாற் பைம்பொற் கனைகழற்கால ஒருபால் தோன்றும்;
நீடு குழலொருபால் நீண்ட சடையொருபால்
வீடிய மானின் அதளொருபால் மேகலைசேர்ந
தாடும் துகிலொருபால் அவ்வுருவம் ஆண்பெண்ணென றறிவார் யாரோ’.
இது நடு இரு சீர் குறைந்து, ஏனையடி இரண்டும் ஆறு சீரான் வந்த ஆசிரிய இணைக் குறட்டுறை.
[ஆசிரியத் துறை]
‘கோடல் விண்டு கோபம் ஊர்ந்த கொல்லைவாய்
மாடு நின்ற கொன்றை ஏறி மௌவல் பூத்த பாங்கெலாம்
ஆடல் மஞ்ஞை அன்ன சாயல் அஞ்சொல் வஞ்சி மாதராய்!
வாடல்; மைந்தர் தேரும் வந்து தோன்றுமே’.
இது நடு ஈரடியும் மிக்கு வந்த ஆசிரியத் துறை.
பிறவும் வந்தவழிக் காண்க.
மடக்கு மூவகை: அடி மடக்கும், சீர் மடக்கும், அசை மடக்கும் என. என்னை?
‘இரண்டாம் அடியை இனிதின் மடக்கலும்,
இரண்டாம் அடியின் இறுதிச்சீர் மடக்கலும்,
இரண்டாம் அடியின் ஈற்றசை மடக்கலும்
இவ்வா றென்ப மடக்குதல் தானே’.
என்றாராகலின்.
வரலாறு :
‘வண்டுளர் பூந்தார்’1 எனவும், ‘இரண்டு குயின்முழவா’2
எனவும் இவை அடி மடக்கு.
‘கண்ணியோர் கண்ணி’ என்பது சீர் மடக்கு.
1. யா. வி. பக் 218. 2. யா. வி
|