பக்கம் எண் :
 

 302                                   யாப்பருங்கல விருத்தி

   இனி, ஆசிரிய மண்டில விருத்தம் வருமாறு:

[அறுசீர் அடிமறி மண்டில ஆசிரிய விருத்தம்]

     ‘செங்கயலும் கருவிளையும் செருவேலும1 பொருகணையும் செயிர்க்கும்
                                                       நாட்டம்;
     பங்கயமும் இலவலரும்? பனிமுருக்கும் பவழமுமே பழிக்கும் செவ்வாய்5
     பொங்கரவின் இரும்படமும் புனைதேரும் பொலிவழிக்கும் புடைவீங்
                                                        கல்குல்;
     கொங்கிவரும் கருங்கூந்தற் கொடியிடையாள் வனமுலையும் கூற்றம்
                                                        கூற்றம்’.

 இஃது அறுசீர்க் கழிநெடில் அடியான் அடிமறியாய்க் கூறப்படுதலால்,
 அடிமறி மண்டில ஆசிரிய விருத்தம்.

[எண்சீர் ஆசிரிய மண்டில விருத்தம்]

     ‘வெறிவிரவு புன்சடைமேல் வெள்ளம் பரக்கும்,
       விறல்விசயன் ஆகத்து வெள்ளம். பரக்கும்;
     கரைவிரவு நஞ்சுண்டு கண்டங் கறுக்கும்;
       கழலடைந்தார் தீவினையைக் கண்டங் கறுக்கும்;
     பொறிவிரவு பூண்முலையாள் போகத்த னாகும்;
       பொதுநீக்கித் தன்னடைந்தார்4 போகத்த னாகும்;
     நெறிவிரவு காஞ்சி நெறிக்காரைக் காட்டான்;
       நிழலடைந்தார் தம்மை நெறிக்காரைக் காட்டான்’.

 எனவும்,

     ‘நிலங்கா ரணமாக நீர்க்கங்கை ஏற்றான்;
       நீண்டதா ளாலங்கோர் நீர்க்கங்கை ஏற்றான்;
     சலங்கா ரணமாகச் சங்குவாய் வைத்தான்;
       தாயலாள் வீயநஞ்சங்குவாய் வைத்தான்;
     துலங்காச்சீர்த் தானவரைத் துன்னத்தா னட்டான்;
       துன்னுவார்க்11 கின்னமிர்தம் தின்னத்தா னட்டான்;
     இலங்கா புரத்தார்தம் கோமானை எய்தான்;
       ஏத்தாதார்? ? நெஞ்சத்துள் எஞ்ஞான்றும் எய்தான்’.


  பி - ம். 1 செவ்வேலும் ? இலமலரும் 5 பாதம் ஆகத்தும்
 4 தனையடைந்தார் 11 துன்னலார்க்? எய்தாதார்