|
[தனிச்சொல்]
அதனால்
[சுரிதகம்]
‘அரும்பெறல் இவளினும் தரும்பொருள் அதனினும்
பெரும்பெறல் அரியன; வெறுக்கையும் அற்றே;
விழுமிய தறிமதி அறிவாம்
கழுமிய காதலிற் றரும்பொருள் சிறிதே’.
இது சிறப்புடைத் தன்றளையால் நாலடித் தரவும், இரண்டடித் தாழிசை
ஆறும், தனிச்சொல்லும், நாலடிச் ²¤தகமும் பெற்று வந்த இயற்பஃறாழிசைக்
கொச்சகக் கலிப்பா.
குறைப்பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பாவும் வந்தவழிக் கண்டு கொள்க.
[இயல் மயங்கிசைக் கொச்சகம்]
[தரவு]
‘மணிகிளர் நெடுமுடி மாயவனும் தம்முனும்போன்
றணிகிளர் நெடுங்கடலும் கானலும் தோன்றுமால்;
நுரைநிவந் தவையன்ன நொப்பறைய சிறையன்னம்
இரைநயந் திறைகூரும் ஏமஞ்சார் துறைவ! கேள்;
1
‘வரையென 1மழையென மஞ்செனத் திரைபொங்கிக்
கரையெனக் கடலெனக் ? கடிதுவந் திசைப்பினும்
விழுமியோர் வெகுளிபோல் வேலாழி இறக்கில்லா5
தெழுமுந்நீர் பரந்தோங்கும் ஏமஞ்சார் துறைவ! கேள்; 2
[தாழிசை]
‘கொடிபுரையும் நுழைநுசுப்பிற் குழைக்கமர்ந்த திருமுகத்தோள்
தொடிநெகிழ்ந்த தோள்கண்டும் துறவலனே என்றியால்; 1
‘கண்கவர் மணிப்பைம்பூண் கயில்கவைச் சிறுபுறத்தோள்
தெண்பனிநீர் உகக்கண்டும் தெரியலனே என்றியால்; 2
‘நீர்பூத்த நிரையிதழ்க்கண் நின்றொசித்த புருவத்தோள்
பீர்பூத்த நுதல்கண்டும் பிரியலனே என்றியால்; 3
பி - ம். 1 மலையென ? கடலெனக் காற்றெனக் 5 இறக்கல்லா
|