பக்கம் எண் :
 

 354                                  யாப்பருங்கல விருத்தி

     ‘கனைவரல்யாற் றிடுகரைபோற் கைந்நில்லா துண்ணெகிழ்ந்து
     நினையுமென் நிலைகண்டும் நீங்கலனே என்றியால்;          4
     ‘வீழ்சுடரில் நெய்யேபோல் விழுமநோய் பொறுக்கில்லா1
     தாழுமென் நிலைகண்டும் அகல்கிலனே என்றியால்;          5
     ‘கலங்கவிழ்த்த நாய்கன்போற் களைதுணை பிறிதின்றிப்
     புலம்புமென் நிலைகண்டும் போகலனே என்றியால்           6

[தனிச்சொல்]

அதனால்

[அராகம்]

     ‘அடும்பயில் இறும்பிடை நெடும்பனை? மிசைதொறும்
     கொடும்புற மடலிடை ஒடுங்கின குருகு;                    1
     ‘செறிதரு செருவிடை எறிதொழில் இளையவர்
     நெறிதரு புரவியின் மறிதரும் திமில்;                      2
     ‘அரைசுடை நிரைபடை விரைசெறி முரசென
     நுரைதரு திரையொடு கரைபொரும் கடல்;                  3
     ‘அலங்கொளி விரிசுடர் 5 இலங்கெழில் மறைதொறும்ா
     கலந்தெறி காலொடு புலம்பின பொழில்’.                   4

[தாழிசை]

     ‘விடாஅது கழலுமென் வெள்வளையும் தவிர்ப்பாய்மன்;
     கெடாஅது பெருகுமென் கேண்மையும் நிறுப்பாயோ?         1
     ‘ஒல்லாது கழலுமென் ஒளிவளையும் தவிர்ப்பாய்மன்;
     நில்லாது பெருகுமென் நெஞ்சமும் நிறுப்பாயோ?            2
     ‘தாங்காது கழலுமென் தகைவளையும் தவிர்ப்பாய்மன்;
     நீங்காது பெருகுமென் நெஞ்சமும் நிறுப்பாயோ?             3
     ‘மறவாத அருளுடையேன் மனநிற்கு மாறுரையாய்;
     துறவாத தமருடையேன் துயர்தீரு மாறுரையாய்              4
     ‘காதலார் மார்பன்றிக் காமக்கு மருந்துரையாய்;
     ஏதிலார் தலைசாய யானுய்யு மாறுரையாய்;                  5
     ‘இணைபிரிந்தார் மார்பன்றி இன்பக்கு மருந்துரையாய்;
     துணைபிரிந்த தமருடையேன் துயர்தீரு மாறுரையாய்          6


  பி - ம். 1 பொறுக்கல்லா ? இறும்பி னெடும்பணை 5 அலங்கொளி ரவிர்சுடர் 3 இலங்கொளி மலர்தோறும்