பக்கம் எண் :
 

 356                                   யாப்பருங்கல விருத்தி

[தாழிசை]

     ‘அவனுந்தான்,
     ஏனல் இதணத் தகிற்புகை உண்டியங்கும்
     வானூர் மதியம் வரைசேரின் அவ்வரைத்
     தேனின் இறாலென ஏணி இழைத்திருக்கும்                    1
     கானக நாடன் மகன்;

     ‘சிறுகுடி யீரே! சிறுகுடி யீரே!
     வள்ளிகீழ் வீழா, வரைமிசைத் தேன்றொடா,
     கொல்லை குரல்வாங்கி ஈனா, மலைவாழ்நர்
     அல்ல புரிந்தொழுக லான்;                                 2

     ‘காந்தள் கடிகமழும் கண்வாங் கிருஞ்சிலம்பின்
     வாங்கமை மென்றோள் குறவர் மடமகளிர்
     தாம்பிழையார் கேள்வற் றொழுதெழலாற் றம்மையரும்
     தாம்பிழையார் தாந்தொடுத்த கோல்;                         3

[தனிச்சொல்]

எனவாங்கு.

     ‘அறத்தொடு நின்றேனைக் கண்டு திறப்பட
     என்னையர்க் குய்த்துரைத்தாள் யாய்;

     ‘அவரும்,
     தெரிகணை நோக்கிச் சிலைநோக்கிக் கண்செந்
     தொருபகல் எல்லாம் உருத்தெழுந் தாறி
     இருவர்கட் குற்றமும் இல்லையால் என்று
     தெருமந்து சாய்த்தார் தலை;
     ‘தெரியிழாய்! நீயுநின் கேளும் புணர
     வரையுரை தெய்வம் உவப்ப உவந்து
     குரவை தழீஇயாம் ஆடக் குரவையுட்
     கொண்டு நிலைபாடிக் காண்;

     ‘நல்லாய்!
     நன்னாட் டலைவரும் எல்லை நமர்மலைத்
     தந்நாண்தாம் தாங்குவார் என்னோற் றனர்கொல்!
     ‘புனவேங்கைத் தாதுறைக்கும் பொன்னறை முன்றில்
     நனவிற் புணர்ச்சி நடக்குமா மன்றோ?
     நனவிற் புணர்ச்சி நடக்கலும் ஆங்கே