பக்கம் எண் :
 

 358                                  யாப்பருங்கல விருத்தி

[அராகம்]

     ‘அவனே,
     அயன்மலைக் காவலன் காதல னாமே;
     ‘இவளே,
     அதற்கொண்டும் பயப்பெய்தினனே;
     ‘யானே,
     இதற்கொண்டும் பெரும்படர் எய்தினளே;
     ‘அதனால்,
     இதுவிதன் நிலைமையெனும் அதுவிதி யுணரா
     மதுவிரி மலரியள் உறுவனள் அலர்;
     அலர்சிலர் பலரறி குறியுறு வகைகொடி
     தனையிது மிகநொது மலர்வரை வதைகடன் நுமர்;
     நுமர்தரு விதியென நுணுகிய விலகிடை
     தமர்பல ருடன்மகிழ் தகையின திவடகை;
     தகைபெறு குழலெழில் அழல்சுழல் பழியினள்;
     பழிபடர் இடரொடு பலர்
     பலதுயர் செலப்புரி
     புரிதெரி விலர்தமர்;
     தமர்பல தகுதியொ டெமரிவர்
     தகைமிகை நவிலுத லதுவிதி.
     ‘இனியே,
     ஆடல் நடைப்புரவிச் செம்பூட் சேஎய்
     கூடலெனக் குயின்றன தோள்;
     ‘மறந்தரு தானைச் செங்கோற் கிள்ளி
     உறந்தையிற் சிறந்தன முலை;
     ‘மஞ்சுவரைத் திணிதோட் பூழியர் மன்னவன்
     வஞ்சியென மலர்ந்தன கண்;
     ‘இன்றே,
     பொலிகநும் வினையே! பொலிகநும் வினையே’
     நாணணி கொண்ட நன்னுதல் அரிவைக்கும்
     பூணணி கொண்ட பொங்குவரை மார்பற்கும்
     மனையீ ரோதி வாழ்வொடு மல்கிய
     புனையீ ரோதிக்கும் பொலிகநும் வினையே!