பக்கம் எண் :
 

 செய்யுள் இயல்                                         361

     ‘கூறிய உறுப்பிற் குறைபா டின்றித்
     தேறிய இரண்டு தேவ பாணியும்
     தரவே குறையினும் தாழிசை ஒழியினும்
     இருவகை முத்திறத் தெண்ணே நீங்கினும்
     ஒருபோ கென்ப உணர்ந்திசி னோரே’.

 என்றார் மயேச்சுரர்.

     வரலாறு :

[அம்போதரங்க ஒரு போகு]

[தாழிசை]

     ‘கரைபொருநீர்க் கடல்கலங்கக் கருவரைமத் ததுவாகத்
     திரைபொருது புடைபெயரத் திண்டோளாற் கடைந்தனையே;      1

     ‘முகில்பொரு துடல்கலங்க முழவுத்தோள் புடைபெயர
     அகல்விசும்பின் அமரர்க்கும் ஆரமுதம் படைத்தனையே;         2

     ‘வரைபெரிய மத்தாக வாளரவம் கயிறாகத்
     திரையிரியக் கடல்கடைந்து திருமகளைப் படைத்தனையே’       3

[அராகம்]

[பேரெண்]

     ‘அமரரை அமரிடை அமருல கதுவிட
     நுமரது புகழ்மிக மிகவிகல் அடுத்தனை;
     ‘அலைகடல் உலகமும் அந்தணர்க் கீந்தனை,
     உலகொடு நிலவிய ஒருபுகழ் சுமந்தனை.

[இடையெண்]

     ‘ஆதிக்கண் அரசெய்தினை;                        1
     ‘நீதிக்கண் மதிநிரம்பினை ;                           2
     ‘விளங்கெரி முதல்வேட்டனை;                      3
     ‘துளங்கெரியவர் புகழ்துளக்கினை                  4

[அளவெண்]

     ‘அலகு நீ;1 உலகு நீ;2 அருளு நீ;3 பொருளு நீ;4
     நிலவு நீ;5 வெயிலு நீ;6 நிழலு;7 நீரு நீ;8’