பக்கம் எண் :
 

 362                                   யாப்பருங்கல விருத்தி

[தனிச்சொல்]

எனவாங்கு.

[சுரிதகம்]

     ‘பவழம் எறிதிரைப் பரதைக் கோவே!
     புகழ்துறை நிறைந்த பொருவேல் நந்தி!
     உலகுடன் அளந்தனை நீயே;
     உலகொடு நிலவுமதி உதயவரை ஒத்தே’.

     இஃது அம்போதரங்க ஒரு போகு.

     பிறவும் அம்போதரங்க உறுப்புப் பெற்று வந்த அம்போதரங்க ஒரு போகு. வந்த வழிக் கண்டு கொள்க.

     வண்ணக உறுப்புப் பெற்று வந்தன எல்லாம் வண்ணக ஒரு போகு. அவை வருமாறு:

[வண்ணக ஒரு போகு]

[அராகம்]

     ‘அகலிடமும் அமருலகும் அமர்பொருதும் அறந்தோற்றுப்
     புகலிடநின் குடைநிழலாப் புகுமரணம் பிறிதின்றி
     மறந்தோற்று நிறங்கருகி மாற்புகழும் நிலைதளரப்
     புறந்தோற்றுக் கழலார்ப்பப் பொருதகளம் வெறிதாக
     மண்ணுலகும் மறிகடலும் மாமலையும் நிலைகலங்க
     விண்ணுலகம் வியப்பெய்த வெஞ்சமத்துள் அலைத்தனையே;

     அதனால்,
     கனைகடல் உடைதிரை கரைபொரக் கடைந்தனை;
     முனைவரும் அமரரும் முறைமுறை வந்துநின்
     இணைமலர் பலர்புகழ் பயில்வதொர் பண்பினை;
     மருளுறு துதைகதிர் மணியது
     மணிநிற மருளும் நின்குடை;
     குடையது குளிர்நிழல் அடைகுன
     உயிர்களை அளிக்கும் நின்கோல்;
     கோலது செம்மையிற் குரைகடல் வளாகம்
     மாலையும் காலையும் மகிழ்தூங் கின்று’.