[கலியொத்தாழிசை]
‘கொய்தினை காத்தும் குளவி அடுக்கத்தெம்
பொய்தற் சிறுகுடி1 வாரல்நீ ஐய! நலம்வேண்டின்; 1
ஆய்தினை காத்தும் அருவி அடுக்கத்தெம்
ஆசில் சிறுகுடி? வாரல்நீ ஐய! நலம்வேண்டின்; 2
‘மென்றினை காத்தும் மிகுபூங் கமழ்சோலைக்
குன்றச் சிறுகுடி? வாரல்நீ ஐய! நலம்வேண்டின்’. 3
இவை இரண்டடியாய், ஈற்றடி மிக்கு, ஒரு பொருண் மேல் மூன்றடுக்கி
வந்தமையால், கலியொத்தாழிசை எனப்படும்.
[சிறப்புடைக் கலித்தாழிசை]
‘வாள்வரி வேங்கை வழங்கும் சிறுநெறியெம்
கேள்வரும் போழ்தின் எழால்வழி வெண்டிங்காள்!
கேள்வரும் போழ்தின் எழாதாய்க் குறாலியரோ
நீள்வரி நாகத் தெயிறே வாழி வெண்டிங்காள்!’
இஃது ஒரு பொருண்மேல் ஒன்றாய், ஈற்றடி மிக்கு, ஏனையடி தம்முள்
ஒத்து வந்தமையால், சிறப்புடைக் கலித்தாழிசை எனப்படும்.
[சிறப்பில் கலித்தாழிசை]
‘நிலமகள் கேள்வனும் நேர்கழலி னானும்
நலமிகு கச்சியார் கோவென்பவே;
நலமிகு கச்சியார் கோவாயி னானும்
சிலைமிகு தோட்சிங்கன் அவனென்பவே;
செருவிடை யானை அவனென்பவே’.
எனவும்,
‘பூண்ட பறையறையப் பூதம் மருள
நீண்ட சடையான் ஆடுமே;
நீண்ட சடையான் ஆடும் என்ப
மாண்ட சாயல் மலைமகள் காணவே காணவே’.
எனவும் இவை ஒரு பொருண்மேல் ஒன்றாய், ஈற்றடி மிக்கு, இரண்டாமடி
குறைந்து, ஏனையடி இரண்டும் ஒத்து வந்த சிறப்பில் கலித்தாழிசை.
பி - ம். 1 சிறுகுடில்
|