பக்கம் எண் :
 

 374                                   யாப்பருங்கல விருத்தி

     பவளமொடு ஞெமர்ந்துராஅய்
                         ‘இன்னதோர்
     ‘கடிமண முன்றிலும் உடைத்தே
     படுமீன் பரதவர் பட்டினத் தானே’.1

 இஃது அகவற் றூங்கல் குறளடி வஞ்சிப்பா.

     ‘தொடியுடைய தோண்மணந்தனன்;
     கடிகாவிற் பூச்சூடினன்;
     நறைகமழுஞ1 சாந்தநீவினன்;
     செற்றோரை வழிதபுத்தனன்;
     நட்டோரை உயர்வுகூறினன்;
     வலியரென வழிமொழியலன்;?
     மெலியரென மேற்செல்லலன்
     பிறரைத்தான் இரப்பறியலன்;
     இரப்போர்க்கு மறுப்பறியலன்;
     வேந்துடை அவையகத்
     தோங்குபுகழ் தோற்றினன்;
     வருபடை எதிர்தாங்கினன்;5
     பொருபடை புறங்கண்டனன்;
     கடும்பரிய மாக்கடவினன்;
     நெடுந்தெருவிற் றேர்வழங்கினன்;
     ஓங்கியல 3 களிறூர்ந்தனன்;
     தீந்தேறற்4 றசும்புதொலைச்சினன்;
     பாணுவப்பப் பசிதீர்த்தனன்;
     மயக்குடைய மொழிவிடுத்தனன்;
                         ‘ஆங்கு,
     ‘செய்வகை எல்லாம் செய்தனன் ஆகலின்,
     இடுக ஒன்றோ சுடுக ஒன்றோ
     படுவழிப் படுகவிப் புகழ்வெய்யோன்11 றலையே’.2

 இது பிரிந்திசைத் தூங்கல் குறளடி வஞ்சிப்பா.

[சிந்தடி வஞ்சிப்பா]

     கொடிவாலன குருநிறத்தன குறுந்தாளன
     வடிவாலெயிற் றழலுளையன வள்ளுகிரன


    1. யா. வி. 27 உரைமேற். 2. புறம், 239.   பி - ம். 1 தண்கமழும் ? வாய்மொழியலன் 5 எதிர்கழறினன் 3 உடல் சினத்த. 4 தீஞ்சொற11 இகல்வெய்யோன்