‘வஞ்சி இறுதியும் ஆகும் அதுவே’.1
‘அசைகூன் ஆகும் என்மனார் புலவர்’.2
என்றார் பல்காயனார் ஆகலானும்,
‘தானே அடிமுதற் பொருள்பெற வருவது
கூன்என மொழிப குறியுணர்ந் தோரே’.3
‘வஞ்சி இறுதியும் வரையார் என்ப.’4
என்றார் நற்றத்தனார் ஆகலானும் எனக் கொள்க.
வரலாறு :
[நேரிசை வெண்பா]
‘உதுக்காண், சுரந்தானா வண்கைச் சுவரன்மாப்பூதன1
பரந்தானாப் பல்புகழ் பாடி - இரந்தார்மாட்
டின்மை அகல்வது போல இருணீங்க
மின்னும் அளித்தோ மழை’.
என இவ்வெண்பாவினுள் அடிமுதற்கண் ‘உதுக்காண்’ எனத் தனிச்சொல்
வந்தவாறு கண்டு கொள்க.
[நேரிசை ஆசிரியப்பா]
‘அவரே, கேடில் விழுப்பொருள் தருமார் பாசிலை
வாடா வள்ளியங் காடிறந் தோரே;
யானே, தோடார் எல்வளை நெகிழ நாளும்
பாடமை சேக்கையிற் படர்கூர்ந் திசினே;
அன்னள் அளியள் என்னாது மாமழை
இன்னும் பெய்ய 2 முழங்கி
மின்னும் தோழி! என்னுயிர் குறித்தே’55
என இவ்வாசிரியத்துள் ‘அவரே’ எனவும், ‘யாமே’ எனவும், ‘கூன்’
வந்தவாறு கண்டு கொள்க.
[தரவுக் கொச்சகம்]
‘உலகினுள், பெருந்தகையார் பெருந்தகைமை
பிறழாவே; பிறழினும்
இருந்தகைய இறுவரைமேல் 3 எரிபோலச் சுடர்விடுமே;
1-4 யா. வி. 95 உரைமேற். 5. குறுந். 216.
பி - ம். 1 கவானமா, கவாணமா 2 பெய்யு 5 என்னின்னுயிர்
இருவரைமேல்
|