I
நிரல்நிறை முதலிய பொருள்கோட் பகுதியாவன: நிரல்நிறையும்,
சுண்ணமொழி மாற்றும், அடி மறி மொழி மாற்றும், அடி மொழி மாற்றும்,
பூட்டுவிற் பொருள் கோளும், புனல் யாற்றுப் பொருள் கோளும், அளை
மறி பாப்புப் பொருள்கோளும், தாப்பிசைப் பொருள்கோளும், கொண்டு
கூட்டுப் பொருள்கோளும் என இவ்வொன்பதும் எனக் கொள்க.
அவற்றுள் [1] நிரல்நிறைப் பொருள்கோள் இரண்டு வகைப்படும்:
பெயர் நிரல் நிறையும், வினை நிரல்நிறையும் என.
அவற்றுள் பெயர் நிரல்நிறை வருமாறு:
[இன்னிசை வெண்பா]
‘கொடிகுவளை கொட்டை நுசுப்புண்கண் மேனி
மதிபவளம் முத்தம் முகம்வாய் முறுவல்
பிடிபிணை மஞ்ஞை நடைநோக்குச் சாயல்
வடிவினளே வஞ்சி மகள்’.
எனவும்,
[நிலைமண்டில ஆசிரியப்பா]
‘பொறையன் செழியன் பூந்தார் வளவன்
கொல்லி கொற்கை நல்லிசைக் குடந்தை
பாவை முத்தம் பல்லிதழ்க்? குவளை
மாயோள் முறுவல் மழைப்பெருங் கண்ணே’.
எனவும்,
[நேரிசை வெண்பா]
‘கடைசெப்பும் வேயும் கதிர்முலையும் தோளும்;
இடைசெப்பின் ஏர்கொடி; அன்னம் - நடைசெப்பின்;
வண்டுவாழ் கூந்தலாள் வாயும் மடநோக்கும்
தொண்டைமான் ஆறை மகட்கு’.
எனவும்,
|