[குறள் வெண்பா]
‘எடுத்துரைத்த மூவெழுத்துச் சீரினான் ஆய
அடித்தொகை எண்பத்தெட் டாம்’.
என்பவாகலின்.
இனி, நாலெழுத்துச் சீராவன ஐந்து வகைப்படும். ‘அவை யாவையோ?’
எனின், ‘கணவிரி, பூமருது, கடியாறு, விறகுதீ, மழகளிறு’ என இவை.
என்னை?
[இன்னிசைச் சிந்தியல் வெண்பா]
‘கணவிரி பூமருது கார்க்கடி யாறு
விறகுதீ நான்கெழுத்தும் ஆகும்;- குறைவில்
மழகளிறும் அன்ன தகைத்து’.
என்பவாகலின்.
அவற்றுள், பூமருது ஏழெழுத்தடி முதலாகப் பத்தொன்பது எழுத்து
அடிகாறும் உயர்ந்த பதின்மூன்று அடியும் பெற, பதின்மூன்றேயாம்.
என்னை?
[குறள் வெண்பா]
‘பூமரு தேழாதி பத்தொன்பான் காறுயர
ஆகும் அடிபதின்மூன் றாம்’.
என்பவாகலின்.
ஒழிந்த ‘கணவிரி, கடியாறு, மழகளிறு, விறகுதீ’ என்னும் நான்கு சீரும் எட்டெழுத்தடி முதலாகப் பத்தொன்பது எழுத்து அடிகாறும் உயர்ந்த
பன்னிரண்டடியும் பெற, நான்குமாய் நாற்பத்தெட்டு அடியாம்.
என்னை?
[குறள் வெண்பா]
‘ஒழிந்தநான் கெட்டாதி பத்தொன்பான் காறும்
மொழிந்த அடிநாற்பத் தெட்டு’.
என்பவாகலின்.
|