|
[தரவு கொச்சகம்]
‘யதிகணம் இருநிலம் இறைவனோ டிமையோர்
துதிதிகழ் மொழியிசை துதைமதில் உடையேம்
அதிபதி அடியிணை அடைகுவம் எழுநாம்
மதிபுரை திருமுக மடநடை மயிலே’.
இது பதினைந்தெழுத்தடி அளவியற்சந்தம்.
[கட்டளைக் கலித்துறை]
‘மாவரு கானல் வரையதர்ப் பாங்கர் மலிகுரவின்
பூமலி சோலைத் திருவருங் காண்பர் புதுமதுநீர்த்
தாமரை வாவித் தடமலர் சாடிக் கயலுகளக்
காமரு நீலம் கனையிருள் காலும் கழனிகளே’.
இது பதினாறெழுத்தடி அளவியற்சந்தம்.
[எழுசீர் விருத்தம்]
‘கோலக் கொன்றைக் கொழுநன் எழிலார் கொம்பன
தோளை நாளும்
சாலப் புல்லித் தளவ மடவாள் தானகத் தோகை எல்லாம்
ஆலக் கொண்மூ அதிரும் இதுகாண் ஆய்மலர்க் கோதை
நல்லாய்
காலச் செவ்வேற் கனகக் கடகக் காதலர் சொன்ன ஆறே’.
எனவும்,
[கட்டளைக் கலித்துறை]
‘செருவிளை வைவேல் திகழொளி வேந்தர் திருமுடிமேல்
உருவிளை ஒண்போ துறுநின பாதங் குறைவறியாக்
கருவிளை யாட்டும் கவினுடை வாட்கட் கனிபுரைவாய்த்
திருவிளை யாடும் கனவரை யாகச் சினவரனே’.
எனவும் இவை பதினேழெழுத்தடி அளவியற்சந்தம்.
[அறுசீர் விருத்தம்]
‘பிணியார் பிறவிக் கடலுட் பிறவா வகைநா மறியப்
பணியாய் மணியார் அணைமேல் பணியா வொருமூ வுலகும்
கணியா துணரும் கவினார் கலைமா மடவாள் கணவா!
அணியார் கமலத் தலரா சனனே! அறவா ழியனே!’
இது பதினெட்டெழுத்தடி அளவியற்சந்தம்.
|