பக்கம் எண் :
 

 ஒழிபு இயல்                                           513

[அறுசீர் விருத்தம்]

      ‘திருகிய புரிகுழல் அரிவைய ரவரொடு
           திகழொளி இமையவரும்
      பெருகிய கரிகுல மருவிய படையொடு
           பரிதலில் அரசவையும்
      முருகுடை மலரொடு முறைமுறை வழிபட
           முனிகளை நனியகலா
      அருகன திருவடி அடைபவர் அடைகுவர்
           அமரொளி அமருலகே’.

 எனவும்,

[எண்சீர் விருத்தம்]

      ‘பொங்கழல் நாகம் புற்றக நீங்கிப்
           புரிமிக முறுகிய கயிறென மிளிரும்
      தங்கிய வெண்டேர் வெஞ்சுர நீந்தித்
           தனதட மிடைசெறி மடமயில் இயலாய்ச்
      செங்கய லொண்கட் டேமொழி யாளும்
           திறலொடு முடுகிய செறிகழ லவனும்
      பங்கய வாவிப் பன்மணி மாடப்
           பதிநனி குறுகுவர் பரிவொழி யினிநீ’.

 எனவும் இவை இருபத்தைந்தெழுத்தடி அளவியற்சந்தம்.

[கலி நிலைத்துறை]

      ‘கரிமருவு கடிமதிலி னிடுகொடிகள் திசைதடவு கடுமையினதாய்த்
      திருமருவு பெருவிழவொ டமரர்குழு வொழுகுதொழு செழுமை
                                                  வழுவாத்
      திருமரபி னரபதிக ளணிகிளரு மணிமகுட முறமறுவிலாக்
      குருமருவு விரிகமல சரணநனி பணிவர்மலி குருசினகரே’.

 இஃது இருபத்தாறெழுத்தடி அளவியற்சந்தம்.

      இனி அளவழிச் சந்தத்திற்குச் சில வருமாறு:

[வஞ்சி விருத்தம்]

      ‘பொங்கு சாமரை தாம்வீசச்
      சிங்க பீடம் அமர்ந்தவெங்