|
சந்த அடியும் தாண்டக அடியும் விரவி ஓசை கொண்டு வந்தால்,
அவை சந்தத்தாண்டகம் என்றும், தாண்டகச் சந்தம் என்றும் வழங்கப்படும்.
என்னை?
[நேரிசை வெண்பா]
‘சந்தச் சரணமும் தாண்டகத்தின் பாதமும்
வந்து மயங்கி வழுவிகந்த - செந்தமிழ்நர்
ஈண்டு வடநூற் புலவர் இயற்சந்தத்
தாண்டகம் என்றுரைப்ப தாம்’.
என்பவாகலின்.
அவற்றுட் சில வருமாறு:
[எண்சீர் விருத்தம்]
‘அங்குலியின் அவிரொளியால் அருண மாகி
அணியாழி மரகதத்தாற் பசுமை கூர்ந்து
மங்கலஞ்சேர் நூபுரத்தால் அரவம் செய்யும்
மலரடியை மடவன்ன மழலை ஓவாச்
செங்கமல வனமென்று திகைத்த போழ்தில்
தேமொழியால் தெருட்டுதியோ, செலவி னாலோ?
தொங்கலம்பூங் கருங்கூந்தற் சுடிகை நெற்றிச்
சுந்தரி! நிற் பணிவார்க்கென் துணிவு தானே!’1
இதனுட் சந்த அடியும் தாண்டக அடியும் மயங்கி வந்தவாறு கண்டு
கொள்க. பிறவும் அன்ன.
இனி ஒரு சாரார், சந்த அடி பலவாய் வருவனவற்றைச் ‘சந்தத்
தாண்டகம்’ என்றும், தாண்டக அடி பலவாய் வருவனவற்றைத் ‘தாண்டகச்
சந்தம்’ என்றும், சந்த அடியும் தாண்டக அடியும் ஒத்து வருவனவற்றைச்
‘சமசந்தத் தாண்டகம்’ என்றும் வழங்குவர். அவை வந்தவழிக் கண்டு
கொள்க.
நான்கடியும் ஒத்து வருவனவும், நான்கடியும் ஒவ்வாது வருவனவும்,
இரண்டடி ஒத்து நான்கடியால் வருவனவும், பிறவாற்றால் வருவனவும்;
மாராச்சையும், மிச்சாகிருதியும்
1 யா. வி. 15 உரைமேற்.
|