பக்கம் எண் :
 

 520                                   யாப்பருங்கல விருத்தி

 தெய்வமும், திசையும், மந்திரமும், மண்டிலமும், பொறியும், எழுத்து முதலாகிய பண்பும் அறிந்து ஆராதிப்ப இவை யாவர்க்கும் கல்வியும் புலமையுமாக்கி, நன்மை பயக்கும். இவை யெல்லாம் திணைநூலுட் கண்டு கொள்க.

      அவற்றுட் சில சொல்லுமாறு:1

[நேரிசை வெண்பா]

      ‘வெண்பா முதலாக வேதிய ராதியா
      மண்பால் வகுத்த வருணமாம்; ஒண்பா
      இனங்கட்கும் இவ்வாறே என்றுரைப்பர் தொன்னூல்
      மனந்தட்பக் கற்றோர் மகிழ்ந்து.’

      ‘மீனாடு தண்டேறு வேதிய ராதியா
      ஆனாத ஐந்தொன்பா னாயினவும் - தேனார்
      விரைக்கமல வாண்முகத்தாய்! வெள்ளை முதலா
      உரைத்தனவும் இவ்வாறே ஒட்டு.’1

      ‘ஆரல் மகமோ டனுடம் அவிட்டமென்
      றீரிரண்டும் ஆதியா வெண்ணியநாள் - சீரிய
      வெண்பா அகவல் கலிவஞ்சி என்றுரைத்தார்
      எண்பா அறிவோர் எடுத்து.’

      ‘வேதியர்க்கு வெண்மை; வியன்செம்மை வேந்தர்க்கு
      நீதிசால் பீதம் நிதிக்கிழவோர்க் - கோதிய
      நீலமாம் ஏனை நிலமையோர்க் கக்குலத்தின்
      பாலவாம் பாவிற்கும் அற்று.’

      ‘ஆரம் அரிசந் தனம்பழுப்போ டங்கலவை
      பாரியனற் பாநான்கின் பாற்படுத்தார் - சீரிய
      வெண்போது செங்கழுநீர் வேரிசேர் சண்பகத்தின்
      வண்போது நீல மலர்.’

      ‘மகயிரம் ஆதியா வண்பூரங் காறும்
      வகையின் மருட்பாவின் நாளாம் - தகாதென்ஞெண்
      டோராசாந் தேரிரு சந்தச்சென் றொண்போது
      தேரிற் பவளம் சிவப்பு.’


  1. யா. வி. 95. உரைமேற்.
  பி - ம். 1 வருமாறு.