பக்கம் எண் :
 

 522                                   யாப்பருங்கல விருத்தி

[நேரிசை வெண்பா]

      ‘முல்லை குறிஞ்சி மருதத்தின் பின்னெய்தல்
      எல்லையில் பாக்கட் கியற்றிணையாம்;- முல்லை
      குறிஞ்சி யெனவிரண்டு குன்றா மருட்கென்
      றறைந்தார் வியன்புலவோர் ஆய்ந்து.’

 எனவும்,

      ‘முல்லை அந்தணன்; குறிஞ்சி அரசன்;
      மல்லல் மருதம் வாணிகன் என்ப;
      நெய்தல் சூத்திரன்; நினையுங் காலைப்
      பல்குலம் என்ப பாலை யானே.’

 எனவும்,

[நேரிசை வெண்பா]

      ‘பண்ணும் திறமும்போல் பாவும் இனமுமாம்
      வண்ண விகற்ப வகைமையால் - பண்மேல்
      திறம்விளரிக் கில்லதுபோல் செப்பல் அகவல்
      இசை மருட்கும் இல்லை இனம்.’1

 எனவும்,

      ‘பாடப் படுவோர்க்கும் பாடு மவன்றனக்கும்
      நாடப் படுநயங்கள் நாடாதே - பாடுமேற்
      காகப்புட் சேரக் கனிபனையின் வீழ்வதுபோல்
      ஆகித்தற் சேரும் அலர்.’

 எனவும்,

      ‘நாற்பா நடைதெரிந்த நன்னூற் பெரும்புலவர்
      நூற்பா நயந்த நுழைபொருளைப் - பாச்சார்த்திப்
      பாவித்துப் பார்மேல் நடாத்தப் படருமே
      நாவித் தகத்து நகம்.’

 எனவும்,

[கலி விருத்தம்]

      ‘புலந்துறை போகிய நலவர் நாவினுட்
      கலந்துறை கலைமகள் கவிதை கந்தமா


  1 யா. வி. 55, 56 உரைமேற்.