பக்கம் எண் :
 

 524                                   யாப்பருங்கல விருத்தி

 பாக்கட்கு ஓசை பிறக்குமாறு உரைத்துக் கொள்க. அவை  சொல்லுமாறு:

[குறள் வெண்பா]

      ‘வெண்சீரிற் செப்பல் பிறக்கும்; விகற்பத்துப்
      பண்பாய்ந்த துள்ளல் படும்.’

      ‘இயற்சீருள் தோன்றும் அகவல்; அவற்றின்
      விகற்பத்து வெள்ளோசை யாம்.’

      ‘தன்சீருள் தூங்கல் கலியடியின் கண்டக்கால்
      வஞ்சிக் கிசையாய் வரும்.’

      ‘மயங்கி வருவனவும் வல்லோர் வகுப்ப
      மயங்காமற் கொண்டுணரற் பாற்று.’

       என இவற்றை விரித்து உரைத்துக்கொள்க.

[நேரிசை வெண்பா]

      ‘தலைவன் தலைமுதலாத் தார்வேந்தன் காறும்
      மலைமுதலா மாநாய்கன் மாதே! - நிலமுழுதும்
      மன்னர்கோ னாளு மறைமுதலா வஞ்சிக்கோன்
      தன்முதலோர்த் தந்தானும் தான்.’

      ‘ஈரிரண்டும் ஏழெழுத்தும் ஈரைந்தும் மூவைந்தும்
      பாரியன்ற நாற்சீர் பதினெட்டும் - ஏர்பாய்
      விளையும் பதினேழ் நிலத்துக் குறள்சிந்
      தளவு நெடில்கழியோ டைந்து.’

      ‘ஐந்தும் அகவற்கு வெள்ளைக் களவடியும்
      சிந்து நெடிலடிக்கட் டொல்லிரண்டும் - வந்த
      தளவிரண்டும் ஆன்ற நெடில்கழியும் ஒண்பாற்
      றளைசிதைவில் தண்டாக் கலிக்கு.’1

      ‘ஈரிரைண்டோ டீரா றெழுவாய் இறுவாயாச்
      சேரும் எழுத்திருசீர் வஞ்சிக்காம்;- ஓரும்
      நெடிலடிக்கு நேர்ந்தனவும் மூவொருசீர் வஞ்சிக்
      கடிவகுத்தார் எட்டாதி ஆய்ந்து.’2


  1. யா. வி. 25. உரைமேற். 2. யா. வி. 25, 90 உரைமேற்.