பக்கம் எண் :
 

 526                                   யாப்பருங்கல விருத்தி

 எழுத்து ஆவது சிறப்புடைத்து; இரண்டெழுத்தினால் அருகி வரப்பெறுமாயினும் எனக் கொள்க.

      என்னை?

[நேரிசை வெண்பா]

      ‘அளவியற்பா ஆன்றசீர் ஐந்தெழுத்திற் பல்கா;
      வளவஞ்சிக் காறுமாம் மாதோ;- வளவஞ்சிச்
      சின்மையொரு மூன்றாகும் என்பர் சிறப்புடைமைத்
      தன்மை தெரிந்துணவோர் தாம்.’1

 என்பவாகலின்.

      அவற்றிற்குச் செய்யுள் வருமாறு:

[நேரிசை வெண்பா]

      குறளடி
      4-6

           பேர்ந்து சென்று சார்ந்து சார்ந்து                     (4)
           தேர்ந்து தேர்ந்து மூசி நேர்ந்து                        (5)
           வண்டு சூழ விண்டு வீங்கி                            (6)

      சிந்தடி      7-9

           நீர்வாய் கொண்டு நீண்ட நீலம்                        (7)
           ஊர்வாய் ஊதை வீச ஊர்வாய்1                      (8)
           மணியேர் நுண்டோ டொல்கி மாலை                 (9)

      அளவடி      10-14

           நன்மணம் கமழும் பன்னெல் ஊர!                    (10)
           அமையேர் மென்றோள் ஆயரி நெடுங்கண்         (11)
           இணையீ ரோதி ஏந்திள வனமுலை                   (12)
           இறும்பமென் மலரிடை யெழுந்த மாவின்             (13)
           நறுந்தழை துயல்வரூஉம் செறிந்தே ரல்குல்           (14)


  1 யா. வி. 25. உரைமேற்   பி - ம். 1 ஈர்வாய். 2 மதியேர்.